கோவை, நவ. 25- மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டதால், இரண்டு பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது. கோவை மாவட்டம், பொள் ளாச்சி பழனியம்மாள் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தை வேல் (77). இவர் கடந்த 22 ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி மருத்துவர்கள் நடத் திய பரிசோதனைகள் குழந்தை வேலுக்கு மூளைச்சாவு ஏற்பட்டி ருப்பது கண்டறியப்பட்டது. இத னையறிந்த குழந்தைவேலுவின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத் திற்கு ஆளாகினர். பின்னர், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குழந்தை வேலுவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தி னர் சம்மதித்தனர். அதன் அடிப்ப டையில் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கும், திருச் சியில் உள்ள தனியார் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. உரிய நேரத்தில் சிறுநீரகங்கள் தான மாக பெறப்பட்டதால் 2 நோயாளி களுக்கு மறுவாழ்வு கிடைத்துள் ளது. முன்னதாக, இறந்தவரின் உட லுக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் வர் நிர்மலா மற்றும் அரசு மருத்து வர்கள், செவிலியர்கள் திரளா னோர் மலர் வளையம் வைத்து அஞ் சலி செலுத்தினர்.