தருமபுரி, டிச.19- உடலுறுப்பு தானம் செய்த வாலி பரின் உடலுக்கு தருமபுரி அரசு மருத்து வர்கள் அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்க லம் பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் (29) என்ற வாலிபர், இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பேருந்து மோதி படு காயமடைந்தார். இவருக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார். அதனால் அவரது உற வினர்களிடம் நிலைமையை எடுத்து கூறியபின், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்க முன்வந்தனர். இதன் பின் உமாசங்கரின் கல்லீரல் மற்றும் இரு சிறுநீர்கள் தானமாக பெறபட்டன. தான மாக பெறபட்ட கல்லீரல் கோவை மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீர கங்கள் ஈரோடு மாவட்டத்திற்கும் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட் டன. இதைத்தொடர்ந்து உமாசங்கரின் உடலுக்கு மருத்துவக்குழுவினர் இறுதி யஞ்சலி செய்து உறவினர்களிடம் ஒப்ப டைக்கபட்டது. பின்னர் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்த ஊருக்கு அடக்கம் செய்ய எடுத்து சென்றனர்.