திருப்பூர், ஜூலை 7- பரம்பிக்குளம் ஆழியாறு நீர்ப் பாசன திட்டத்தில் முதுகெலும்பாக இருக்கும் காண்டூர் சமமட்ட கால் வாய் சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்குமாறு நீர்வளத்துறை அதி காரிகளுக்கு திருப்பூர் மாவட்ட ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ் உத்தர விட்டுள்ளார். பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிக ளான 4,30,730 ஏக்கர் நிலங்க ளுக்கு பாசன வசதி பெறுகிறது. பரம்பிக்குளம் ஆழியார் திட்டத் தில் சம மட்டக் கால்வாய், சர்க்கார் பதி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தொடங்கி திருமூர்த்தி அணை வரை 49.300 கி.மீ தொலைவு செல்கிறது. இந்த சமமட்டக் கால்வாய் பிஏபி திட்டத் தின் முதுகெலும்பாகும். சமமட்டக் கால்வாய் நீண்ட காலப் பயன்பாட் டின் காரணமாகவும், வாய்க்கால் பெரும்பாலும் வனப்பகுதியில் உள்ளதாலும், மழைகாலங்களில் ஏற்படும் மண் மற்றும் பாறை சரிவு களால் வாய்க்கால் பழுதடைந்த நிலையில் நீர் விரயம் அதிகம் ஏற்பட்டது. திருமூர்த்தி அணைக்கு முழுமையாக தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட் டது. இதனை சீரமைக்கும் பொருட்டு தமிழக அரசால் ஒரு உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ரூ.184 கோடி மதிப்பீட்டில், மூன்று சிப்பங்களாக பணிகள் மேற்கொள் ளப்பட்டது. அதில் ரூ.62 கோடியில் கால் வாய் சரகம் 30.100 கி.மீ முதல் 49.300 கி.மீ வரை புனரமைப்புப் பணிகள் நடைபெற்று முடிவடைந்து விட்டது. புனரமைப்புப் பணிகளின் போது நல்ல நிலையில் இருந்து வந்த கருங்கல் கட்டுமானங்கள், படுகையிலுள்ள கான்கீரிட் கட்டுமானங்கள் ஆகியவை தற்போது சேதமடைந்துள்ளது. அதன் பிறகு தொடர் பயன்பாட் டாலும், புனரமைக்காமல் விடப் பட்ட பகுதிகள் நீண்ட காலம் ஆன தாலும், வாய்க்காலின் பக்கவாட்டு சுவர்கள் ஆங்காங்கே சரிந்து தண் ணீர் செல்ல இடையூறாக உள்ள தால் அதிகப்படியான நீரிழப்பு ஏற் பட்டு திட்ட அளவு தண்ணீரை கொண்டு செல்ல இயலவில்லை. எனவே, விடுபட்ட 5260 மீட்டர் கால் வாய் பகுதிகளை 2177 மீட்டர் நீளத் திற்கு கால்வாயின் இரு பக்க வாட்டு சுவர்கள் மற்றும் படுகை யில் ஆர்.சி.சி கட்டுமானமாக புனர மைக்கவும், 3083 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் ஒரு பக்கம் ஆர்.சி.சி கட்டுமானமாகவும் மற்றும் படுகை யில் பி.சி.சி கட்டுமானமாக புனர மைப்பதற்கு, ரூ.72 கோடியில் பணி கள் நடைபெற்று வருகிறது. 2022 -ஆம் ஆண்டில் தொகுப்பு அணை களில் தண்ணீர் நிரம்பி இருந்த காரணத்தினால் சமமட்டக் கால்வா யில் 514 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே புனரமைப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு சமமட்டக் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண் ணீர் கொண்டு வரப்பட்டு இரண் டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாச னத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட் டது. மேலும், பாசன காலங்கள் முடிவடைந்த பின்னர் சமமட்டக் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப் பட்டு புனரமைப்புப் பணிகள் மீண் டும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இப்பணி களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். இந்த ஆண்டு மூன்று வெவ் வேறு இடங்களில் விடுபட்ட பகுதி களில் புனரமைப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 2603 மீட்டர் நீளத்திற்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டு தற்பொழுது முழுமையாக முடிவடையும் நிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 2063 மீட்டர் நீளத் தில் 1985 மீட்டர் நீளத்திற்கு கால்வா யில் இரு பக்கவாட்டு சுவர்கள் மற்றும் ஆர்.சி.சி கட்டுமான புனர மைப்பாகவும், 618 மீட்டர் நீளத் திற்கு கால்வாயின் இடது பக்க வாட்டு சுவர் ஆர்.சி.சி கட்டுமான புனரமைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களிடம் ஆட்சியர் கூறினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்கு மார், செயற்பொறியாளர் (தாட் கோ) கே.சரஸ்வதி, வனசரகர் மணிகண்டன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் (திரு மூர்த்தி வடிநிலக்கோட்டம்) சு.ஆ திசிவன், உதவி பொறியாளர்கள் கே.மாரிமுத்து, ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் சுந்தரம், வனவர் (திருமூர்த்தி மலை) நிமல், தளி பேரூராட்சித் தலைவர் உதயகுமார், துணைத் தலைவர் ஜி.செல்வன், செயல் அலுவலர் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.