districts

ஆதரவற்றோர் காப்பகத்தில் முறைகேடு? உதகை நகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

உதகை, அக்.3- ஆதரவற்றோர் காப்பகத்தில் முறைகே டுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரி னைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் விசார ணைக்கு பின்னர் நகராட்சியிடம் ஒப்படைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள் ளார்.  நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப் புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், அப்துல்கலாம் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இக்காப்பகத்தில், ஆதரவற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப் பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் உட்பட 87 பேர் உள்ளனர். இந்த காப்பகத் துக்கு நகராட்சி மூலம் மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருவ துடன் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பொருளுதவி மற்றும் பண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்க ளாகவே இந்த காப்பகத்தில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற்ற வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர், அப்துல் கலாம் காப்பகத்தில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள முதி யவர்கள் தாக்கப்பட்டு, சொத்துக்கள் பறி முதல் செய்யப்படுகிறது என்பது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ள தாக கூறி, பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத் தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு. அவர்கள் விசாரித்து ஒரு வார காலத்தில் அறிக்கை அளிப்பாளர்கள். அந்த அறிக்கை யின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்தார்.  இந்நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் மகாராஜ், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, தனி வட்டாட் சியர் சங்கீதா ராணி ஆகியோர் தலைமையி லான குழுவினர் அப்துல்கலாம் ஆதரவற் றோர் காப்பகத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்சாட்டுகள் குறித்து நிர்வாகி தஸ்தகீரிடம் பல்வேறு விளக்கங் களை கேட்டறிந்தனர். மேலும், அவர் கொடுத்த ஆவணங்களையும் சோதனை செய்தனர்.  இந்நிலையில், விசாரணையை முடித்த குழு மாவட்ட ஆட்சியரிடம் தங்களது அறிக் கையை சமர்ப்பித்தனர். இதில், காப்பகத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளதும், காப்ப கத்தில் உள்ள முதியவர்களின் மருத்துவ தேவை மற்றும் பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. மேலும், காப்பகத் தில் விதிமீறல்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், காப்பகத்தை நடத்தி வந்த தஸ்தகீர் உடனடியாக காப்பகத்தை விட்டு வெளியேறவும், தஸ்தகீர் இந்த நடவடிக் கைக்கு எதிராக மேல் முறையீடு செய்வதோ, பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. காப்பகத்தில் உள்ளவர்களின் நலன் முக்கியமானதால், காப்பகத்தை உடனடியாக உதகை நக ராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.