districts

img

ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு

தருமபுரி, ஜூலை 14- ஒன்றிய மோடி அரசு கொண்டு  வந்துள்ள, முன்று குற்றவியல் சட் டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி யும், இச்சட்டத்தின் ஆபத்து குறித்து  மக்களிடம் எடுத்துச்செல்லும் வித மாக, தருமபுரி மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியினர், தெருமுனை பிரச் சார இயக்கத்தை முன்னெடுத் துள்ளனர். 

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, ஜனநாயக விரோத  முறையில் மூன்று குற்றவியல் சட் டங்களை பாஜக தலைமையிலான  ஒன்றிய அரசு நிறைவேற்றியுள் ளது. இதுவரை நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் ‘பாரதிய நியாய சன்ஹிதா’ என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ‘பாரதிய நாக ரிக் சுரக்க்ஷா சன்ஹிதா’ என்ற பெய ரிலும், இந்திய சாட்சியச் சட்டம்  ‘பாரதிய சாக்சிய அதினியம்’ என்ற பெயரிலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக, இந்தி, சமஸ்கிருத மொழி யில் சட்டங்களின் பெயர்கள் வடி வமைக்கப்பட்டுள்ளன.

காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் உரிய விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இதுவரையில் இருந்த நடைமுறை. இனி 14 நாட் கள் வரையிலும் இதனைத் தாமதப் படுத்த முடியும். இதுவரை காவல் நிலையத்தில் ஒரு கைதியை 15 நாட்கள் வரை மட்டுமே வைத்து விசாரிக்க முடியும். புதிய சட்டத் தின்படி 15 நாட்களுக்கு மேலாகவும்  விசாரிக்கலாம். புதிய சட்டம் கை விலங்கு பூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எவர் ஒருவரையும் தேச  துரோகி எனக் குற்றம் சுமத்தி கைது  செய்வதற்கு புதிய சட்டம் இடமளிக் கிறது. இந்த புதிய சட்டங்கள் நலிவ டைந்தவர்களையும், ஏழைகளை யும், ஒடுக்கப்பட்ட மக்களையும் மட் டுமில்லாமல், அரசு அதிகாரத்திற்கு  எதிராகக் குரல் கொடுப்பவர்களை யும் தண்டிக்கும் வகையில் அமைந் துள்ளது. அடிப்படை மனித உரிமை களைப் பறிக்கும் பாஜக அரசின்  புதிய சட்டங்களைத் திரும்பப்பெற  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் வழக்கறிஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில், இந்த புதிய சட் டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தெரு முனை இயக்கம் நடைபெற்றது. தரு மபுரி ஒன்றியம், செம்மாண்டகுப் பம் கிராமத்தில் ஞாயிறன்று நடை பெற்ற இந்நிகழ்விற்கு, சிபிஎம் ஒன் றியச் செயலாளர் என்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து, மாவட்டக்குழு  உறுப்பினர்கள் கே.பூபதி, எம்.அருள்குமார், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் பி.ரவி, கே.கோவிந்த சாமி, தீ.மாரியப்பன், எம்.மீனாட்சி, எஸ்.தமிழ்மணி, எம்.பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாய்கன்கொட்டாய், அரியகுளம், இலக்கியம்பட்டி, வெண்ணாம்பட்டி உள்ளிட்ட பகுதி களிலும் தெருமுனை பிரச்சார கூட் டம் நடைபெற்றது.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், சோலாரில்  ஞாயிறன்று மாலை நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் கிளைச்  செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். இதில், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா, ஆர்.மாரிமுத்து  உட்பட பலர் கலந்து கொண்டனர். பெருந்துறை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. பரமசிவம், மாவட்டக்குழு உறுப்பி னர் வி.ஏ.விஸ்வநாதன், தாலுகாச் செயலாளர் முத்துபழனிசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகாக்குழு சார்பில், திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் பா.சின்னச்சாமி தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.குமார், தாலுகாச் செயலா ளர் எஸ்.கே.கொளந்தசாமி, மாவட் டக்குழு உறுப்பினர் சரஸ்வதி, தாலு காக்குழு உறுப்பினர்கள் காமராஜ்,  சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.