பொள்ளாச்சி- ஜூன்-19 பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் திறக்கப்படும் தனியார் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி கள், சமூக இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பிரிவில் தனியார் மதுபான கடை பார் வசதியுடன் திறக்கப்படுவதற்கான வேலை நடைபெற்று வருகிறது. இந்த பகுதி குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியாகும். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப டும் வகையில் திறக்கப்படும் தனியார் மது பான கடை அப்பகுதியில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் சமூக இயக்கங்கள் ஒருங்கி ணைந்து தபெதிக பா.பாலமுருகன் தலைமை யில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், சிபிஎம் தாலுகாச் செயலாளர் எம். அன்பரசன், சிபிஐ வி.சண்முகசுந்தரம், விசிக ச.பிரபு, மதிமுக செந்தில்குமார், மனிதநேய மக்கள் கட்சி சையது அமீர், ஆதித்தமிழர் பேரவை தி.சே கோபால் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.