திருப்பூர், ஜூலை 23 - இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் இடுவாய் கிராமத் தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடுவாய் பேருந்து நிறுத்தம் முன் பாக திங்களன்று மாலை இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரு மான கே.கணேசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக் கையை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மதிமுக ஒன்றிய செயலாளர் சிவமணி, கொமதேக மேற்கு மண்டல செயலாளர் பொன்னு சாமி, விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் அ.பஞ்சலிங் கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் பழனிசாமி, மக்கள் நீதி மையம் பல்லடம் நகரச் செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் இடு வாய் வடக்கு கிளைச் செயலாளர் கே. கருப்புசாமி ஆகியோர் மாநகராட்சி யுடன் இடுவாய் கிராமத்தை இணைத் தால் நேரிடும் இடர்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். இக்கூட்டத்தில் பெரும் அளவில் பெண்களும், அனைத் துக் கட்சிகளை சேர்ந்தோரும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்ட னர். தமிழக அரசு இடுவாய் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற் சியைக் கைவிடவில்லை எனில் மக்க ளைத் திரட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள் ளதாக இடுவாய் ஊராட்சிமன்றத் தலை வர் க.கணேசன் தெரிவித்தார்.