districts

img

தென்னை நார் கழிவு தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

ஈரோடு, ஜன. 27- கொடுமுடி அருகே தென்னை நார் கழிவு ஆலைக்கு எதிர்ப்பு தெரி வித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் அரசு செயலாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், இச்சிபாளையம் ஊராட்சி,  இச்சிப்பாளையத்தில் பட்டியலின மக்களின் குடியிருப்பு பகுதிக்கு  மிக அருகில் ஸ்ரீ கொங்கு காயர்ஸ் கிலஸ்ட்டர் எனும் தென்னை நார்  கழிவு தொழிற்சாலை அமைக்கப் பட்டுள்ளது. அரசு அனுமதி பெறா மல், அங்கு தென்னை நார் மூலம்  பாய்கள், விரிப்புகள்  உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து, கெமிக்கல் சாயம் ஏற்றி லாரியில் எடுத்து சென்ற வாகனம் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது. வருவாய்த் துறை மற்றும் காவல்துறை கம்பெனியை இயக்க மாட்டோம்  என்று எழுத்து பூர்வமாக அளித்த னர். கிராமசபை கூட்டத்திலும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில், தொழிற் சாலைக்கு அனுமதி வழங்கி  கொடுமுடி வட்டார வளர்ச்சி அலு வலர் உத்தரவு பிறப்பித்துள்ளார் வலுவான அரசியல் செல்வாக்கு மிக்க ஆலை நிர்வாகம் என்பதால்,  மக்களின் கருத்தை கேட்காமல்  ஆட்சேபனையை உதாசீனப்ப டுத்தி வழங்கியுள்ள ஆலைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண் டும். தவறு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என இதனை எதிர்த்து கிராம  மக்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் தொடர்ச்சியான போராட் டங்கள் நடத்தி வருகின்றனர். ஆலைக்கான அனுமதியை ரத்து  செய்ய வேண்டும். தவறு செய்த  அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக மற்றும்  உள்ளாட்சி வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்க ளுக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு அனுப்பிள்ளார். மேலும், சென்னை தலைமைச்  செயலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  கூடுதல் அரசு செயலாளர் ரத்னாவி டமும் மனு கொடுக்கப்பட்டது. இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ,  மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் கேபி.கனகவேல், இச்சிப் பாளையம் கிராம நிர்வாகிகள் கே. மூர்த்தி, கே மாதப்பன் ஆகியோர் ஆகியோர் உடன் சென்றனர்.