districts

img

பள்ளி வளாகத்தில் நீதிமன்றம் கட்ட எதிர்ப்பு

 நாமக்கல், மே 29- அரசு பள்ளி வளாகத்தில் நீதிமன்ற அமைப்பதற்கு முன் னாள் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.  இப்பள்ளி வளாகத்தில், சேந்தமங்கலம் வட்ட நீதிமன்றம் அமைக்கப்படுமென தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு  உள்ளது. பள்ளி வளாகத்தில் நீதிமன்றம் அமைக்கப்பட் டால், பள்ளியின் அமைதியான சூழல் கெட்டுப்போய்விடும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, நீதிமன்றம் அமைக்கும் திட்டத்தை  திரும்ப பெற வலியுறுத்தி இப்பள்ளியில் பயின்ற முன்னாள்  மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்ற  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேந்தமங்கலம் தனியார்  திருமண மண்டபத்தில் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு  தலைவர் மருத்துவர் பாலாஜி தலைமை ஏற்றார். இதில், பள்ளியில் நீதிமன்றம் வளாகம் கட்டினால் பல  பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக, பள்ளியின் அமைதியான சூழல் பாதிக்கப்படும். எனவே, நீதிமன்றத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில், சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த  400க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.