நீதிபதி எம்.சத்யநாராயணன் கருத்து புதுக்கோட்டை, மே 7- வேங்கைவயலில் குடிநீரில் மனிதக் கழிவைக் கலந்த சம்பவம், மனிதத்தன்மை யற்ற செயல் என ஒரு நபர் விசாரணை ஆணை யத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்யநாரா யணன் கருத்து தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் சனிக்கிழமை புதுக்கோட்டை வருகை தந்தார். பின்னர் வேங்கைவயல் கிராமத்துக்குச் சென்ற அவர், மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர்த் தொட்டி மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி ஆகியவற்றையும் நேரில் பார்வை யிட்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், அங்கு அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, வேங்கைவயல் விவகாரம் தொடர் பாக கேட்டறிந்தார். பின்னர் நீதிபதி எம்.சத்யநாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆணை யத்தின் ஆரம்ப நிலையிலான விசாரணை நடைபெற்றுள்ளது. அரசு அலுவலர்கள் எடுத்த நடவடிக்கைகளை விளக்கினர். முதலில் நேரில் பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தங்கள் நடவடிக்கையை விளக்கினர்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்க ளில் மீண்டும் விசாரணை நடத்தப்படும். யாரிட மெல்லாம் விசாரிப்பது என்பது குறித்து இன் னும் முடிவு செய்யவில்லை. சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரு கிறது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் கண்கா ணிப்பு கேமரா இல்லை. அதாவது குற்றத்தை நேரில் பார்த்தவர்கள் - இதுவரை யாரும் கிடைக்கவில்லை. எனவே, குறிப்பிட்ட கால வரையறை எதுவும் காவல்துறை விசார ணைக்கு கொடுக்க முடியாது. அறிவியற்பூர்வ மான விசாரணை நடத்தி வருகிறார்கள். அதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும். மரபணு பரிசோதனையைப் பொறுத்த வரை யாரையும் கட்டாயப்படுத்தவும் முடியாது. பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகை யைப் பொறுத்தவரை, தற்போது சட்டப்படி 25 சதவிகிதம் வழங்கப்பட்டிருக்கிறது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் மீதமுள்ள 75 சதவிகிதத்தை வழங்க முடியும். நீதிமன்ற கண்காணிப்பில்தான் சிபி சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆணையத்துக்கு 2 மாத அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் சூழல் குறித்தும், இனி இதுபோல நடக்காமல் தடுப்பது குறித்தும் ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். பொதுவாக, இந்தச் செயல் மனிதத்தன் மையற்ற செயல். கொடூர மனம் கொண்ட வர்களால் மட்டுமே இதுபோல செய்ய முடி யும்’’ என்று தெரிவித்தார்.