districts

img

நிறுத்தப்பட்ட ரயில்களை பயணிகள் வசதிக்கேற்ப இயக்கிடுக

மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் திருப்பூர் ஜூலை 17 - கொரோனா பொது முடக்க காலத்தில் இருந்து நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை பொதுமக்கள் பயணிப்பதற்கு ஏற்ப உடனடி யாக இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் - கோவை பயணிகள் ரயில், ஈரோடு - கோவை பயணிகள் ரயில், கோவை - நாகர்கோயில் பயணிகள் ரயில், பாலக்காடு டவுன் திருச்சி பயணிகள் ரயில் ஆகியவை கொரோனா பொது முடக்க காலத்தில் நிறுத் தப்பட்டன. பொது முடக்கம் நீக்கப்பட்ட பிற கும் இந்த ரயில்கள் முழுமையாக இயக்கப் படவில்லை. இதில் சில பயணிகள் ரயில் களை, விரைவு ரயில் என்று பெயர் மாற்றி வழக் கமாக நிறுத்தப்படும் ஊர்களின் எண்ணிக் கையை குறைத்தும், பயணிகள் வசதிக்கு ஏற்ற நேரத்தை மாற்றியும், அடிக்கடி ஏதே னும் காரணங்களை சொல்லி இந்த ரயில் களை நிறுத்தியும் தென்னக ரயில்வே சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோவை திருப்பூர் ஈரோடு சேலம் வழித்தடத்தில் ஒவ் வொரு நாளும் வேலை மருத்துவம் கல்வி ஆகியவற்றிற்காக பயணம் செய்யும் ஆயிரக் கணக்கான ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்து போக்குவரத்து கட்டண கொள்ளைக்கு வழி வகுக்கும் முறையில் பொதுப்போக்குவரத் தான ரயில்கள் நிறுத்தப்படுவது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. எனவே, பயணிகள் ரயில்களை ஏற்க னவே இயக்கப்பட்டது போல பயணிகளின் வசதிக்கு ஏற்ற கால அட்டவணைப்படி முழு மையாக தொடர்ச்சியாக இயக்க வேண்டும். அதேபோல் திருப்பூரில் இருந்து தென் மாவட் டங்களுக்கான ரயில் வசதியை கூடுதல் படுத்த வேண்டும்,

50,000 கோடி ரூபாய்க்கு மேலாக பனியன் உற்பத்தி வர்த்தகம் நடை பெறக்கூடிய திருப்பூர் மாநகருக்கு ஏற்ற முறையில் இங்குள்ள ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இங்கு வரக்கூடிய தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும், சரக்குப் போக்குவரத்துக்கு உரிய ரயில் மற்றும் ரயில் முனைய வசதிகளை மேம்படுத்த வேண் டும். தேவையான வழித்தடங்களில் கூடுதல்  ரயில்கள் இயக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக தியாகி குமரன் நினைவகம் அருகில் திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் திருப்பூர் தெற்கு மாநகர செயலா ளர் டி.ஜெயபால் தலைமை ஏற்றார். மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் ஜி.சுகுமாரன், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் ஆகியோர் உரையாற்றி னர். இதில், தலைவர்கள் பேசுகையில், ஏற்க னவே பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் ரயில்வே ஆலோசனை குழு கூட் டத்திலும் மக்களவை எம்.பி.,க்கள் மூலமாக வும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும்  அவற்றை நிறைவேற்றாமல் காலதாமதம் செய் கிறது. பயணிகள் வசதிக்கு ஏற்ப ரயில்களை இயக்காவிட்டால் அடுத்த கட்டமாக மார்க் சிஸ்ட் கட்சியினர் மற்றும் ரயில் பயணிகளை திரட்டி ரயில் நிலைய முற்றுகை மற்றும் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எச்சரித்தனர்.