கோபி, டிச.11- கோபி அருகே தடப்பள்ளி - அரக்கன் கோட்டை வாய்க்காலில் இரண்டாம்போக நஞ்சை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப் பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணைகட்டின் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்தில் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங் கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில், நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட வற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தடப் பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் முதல்போக நெல் அறுவடைப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டாம் போக நஞ்சை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண் டும் என பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனடிப்படை யில், புதனன்று கொடிவேரி அணைகட்டிலி ருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க் காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. மதகிலி ருந்து சீறிபாய்ந்த தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.