districts

img

அவசர கோலத்தில் வாரச்சந்தை திறப்பு: மக்கள் அதிருப்தி

திருப்பூர், ஜன.5 - திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் முதலி பாளையம் ஊராட்சியில் வாரச்சந்தை பணி முழுமையாக முடிவடையாமல் இருக்கும் நிலையில், ஊராட்சி மன்ற  பதவிக்காலம் முடிவடையும் கடைசி  நாளான ஞாயிற்றுக்கிழமை அவசரக்  கோலத்தில் திறப்பு விழா நடத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற ஊராட்சிக ளில் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநி திகளின் பதவிக்காலம் ஜனவரி 5ஆம்  தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவ டைந்துள்ளது.  கடைசி இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்ப தால் பெரும்பாலான ஊராட்சி நிர்வா கங்கள் வெள்ளிக்கிழமையே பொது  நிகழ்ச்சிகள் நடத்துவது நிறைவ டைந்துள்ளது.  இந்நிலையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் முதலிபாளையம் ஊராட்சி யில் ஞாயிறன்று எவ்வித முறையான அறிவிப்பும் இல்லாமல், பணிகள் நிறைவடையாமல் அவசர கோலத்தில் வாரச்சந்தை திறக்கப்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் இருப்ப தால் சாலையோர கடைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் போக் குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்து வருடங்களுக்கு மேலாக ஊராட்சியில் வார சந்தை தேவைப்படுவதாக கோரிக்கை வைத்து வந்தது.  இதன் தொடர்ச்சியாக செம்மாண் டம்பாளையம் பகுதியில் வார சந்தை ஏற்படுத்தப்பட்டது. ஏ.ஜி.எம். ஏ.டி. திட்டத்தில் 2020 - 2021 ஆம் நிதி யாண்டில் ரூ.6 லட்சத்து 79 ஆயிரம்  நிதி ஒதுக்கப்பட்டு வேலை நடைபெற் றது.  எனினும் இந்த வேலை முழு மையாக நிறைவடையாத நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் மயூரி பிரியா மற்றும் சில வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஞாயிறு காலை திறப்பு விழா நடத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய சந்தையை, திறப்பு விழாவிற்கு அனை வருக்கும் தகவல் கொடுக்காமல் செய் தது சரியல்ல என்று அப்பகுதி மக்கள் கூறினர்.  மேலும் திறப்பு விழா முடிந்து விட்டது என்று சொல்லி அப்படியே விட்டு விடக்கூடாது. சந்தையில் சிமெண்ட் தளம் அமைப்பது, மைதா னத்தை சமப்படுத்துவது உள்ளிட்ட  பணிகளையும் தாமதம் இல்லாமல் நிறைவு செய்து, மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.