கோவை, ஜூன் 14- பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கோவை மற்றும் சேலத்தில் குழந் தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், புதனன்று பள்ளிகள் திறக்கப்பட் டுள்ளன. குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சில பள்ளிகளில் மிக்கி மவுஸ், ஜோக்கர் என குழந் தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங் களை போன்று வேடம் அணிந்திருந்தனர். மேலும், உற்சாக இமோஜி படங் களை கொண்டும் இனிப்பு கள் வழங்கி குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வர வேற்றனர். இதனால் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். மேலும், முதல் நாள் என்பதால் பெற்றோர்களும் பள்ளி களுக்கு உடன் வந்தனர். ஆசியரியர்கள் குழந்தைகளை இன்முகத்துடன் வரவேற் றனர். பல பெற்றோர்கள் காலையில் பள்ளி யில் விட்ட பிறகு வீடு திரும்பாமல், பள்ளி முடியும்வரையில் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்து பிள்ளைகளை அழைத்த சென்றனர். பாலர் பூங்கா வரவேற்பு இதேபோல் சேலம் மாவட்டம், நங்க வள்ளி, பனங்காட்டூர் அரசு தொடக்கப்பள்ளி யில் பாலர் பூங்கா சார்பில் பள்ளி குழந்தை களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக் கப்பட்டது. இதில் மாதர் சங்க கிளை நிர்வாகி கள் சத்யா, பூங்கொடி, மேகலா, கவிதா, எல். சுசீலா மற்றும் பாலர் பூங்கா ஒருங்கிணைப் பாளர் கே.ராஜாத்தி மற்றும் தலைமை யாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.