உதகை, ஏப்.12- கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியானது மே 13 ஆம் தேதியன்று துவங்குவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்த கிரி பகுதியில் ஆண்டு தோறும் கோடை விழா நடத் தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கூடலூரில் கோடை விழா நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடு கள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடத்துவதற்கான ஏற்பாடு களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில், கூடலூரில் மே 13 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத னால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில் கூடலூரில் கோடை விழா நடத்துவது தொடர்பான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவண கண்ணன், காவல் துணை கண்காணிப்பா ளர்கள் குமார், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.