திருப்பூர், ஆக.27 - திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரு பகுதிகளில் ஒரு நியாயவிலைக் கடை மற்றும் பள்ளி உள் அரங்கம் ஆகியவை கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.23.34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 60 ஆவது வார்டு பொன்கோவில் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டப் பட்டது. சனியன்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., இந்த கடையை திறந்து வைத்து மக்க ளுக்கு பொருள் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். அதேபோல், திருப்பூர் மாநக ராட்சி 54 ஆவது வார்டு வீரபாண்டி யில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதி ரூ.11.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள் அரங்கத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மேயர் தினேஷ் குமார், மண்டலத் தலைவர் இல. பத்மநாபன், மாமன்ற உறுப்பினர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.