தருமபுரி, ஜூன் 7- தருமபுரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நவீன குளிர்சாதன இரண்டு அடுக்கு பேருந்து நிழற்கூடம் திறக் கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாடாளு மன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும் நவீன குளிர்சாதன இரண்டு அடுக்கு பேருந்து நிழற்கூடம் 400 சதுர அடி பரப்பளவில் அமைக் கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செந்தில் குமார் எம்.பி., முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி திறந்து வைத்தார். இப்பேருந்து நிழற்கூடத்தின் தரைத்தளத் தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இருக்கை வசதி, காத்திருப்பு அறை, சிறப்பு அங்காடி உள்ளிட்டவை களும், முதல் தளத்தில் தானியங்கி பணப்பரிவர்த்தன இயந் திர வசதி, குளிர்சாதன பாதுகாக்கப்பட்ட தாய் - சேய் பாலூட் டும் அறை, மினி நூலக வசதி உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா, இலவச இணைய வசதி, தொலைக்காட்சி, செல்பி பாயிண்ட், கார்டன் சிட் அவுட், கைப்பேசி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளன. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முக மையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.தீபனா விஸ்வேஸ் வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிர மணி உட்பட அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.