districts

img

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு - முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

சேலம்,மே 23- டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட் டூர் அணை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திங் களன்று தனி விமானம் மூலம் சென்னை யில் இருந்து சேலம் விமான நிலையதிற்கு வந்தார். அதனை தொடர்ந்து மேட்டூர் சென்று அங்கு உள்ள அரசு விருந்தினர் மாளி கையில் தங்குகிறார். அதன்பின், செவ்வாயன்று காலை 10 மணி அளவில் டெல்டா பாசனத்திற் காக தண்ணீர் திறந்து வைக்கிறார்.  மேலும், ஆத்தூர் அருகே நடைபெறும் ஓராண்டு  சாதனை பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும்  தமிழக முதல்வர், தொடர்ந்து சாலை மார்க்க மாக ஓமலூர் காமலாபுரம் பகுதியில் விமான  நிலையம் வந்தடைந்து, விமானம் மூலமாக  சென்னை திரும்புகிறார். முன்னதாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி டெல்டா பாசன விவசா யத்திற்கு மேட்டூர் அணை திறப்பது வழக் கம். தற்போது மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.