கோபி, செப்.11- ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள மொடச்சூரில் ஜெகன் மெட்டல் மார்ட் சார்பில் புதிதாக கிச்சன் ஜூவல்ஸ் ஷோரூம் திறப்பு புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோபி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி, பொருளாளர் பொன்னுத்துரை, ரமா பிரபா, சின்னத்திரை நடிகை ப்ரித்திசர்மா, நடிகர் சுதர்சனம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார். ஷோரூம் குறித்து ஜெகன் மெட்டல் பாலசிங் கூறியதாவது, கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக பிரீமியம் எவர்சில்வர் பொருட்களுக்கான ஷோரூம் தொடங்கி உள்ளோம். ஷோரூமில் மிக விலை உயர்ந்த ஆர்டியோனெக்ஸ் பெயர் கொண்ட ஐஎஸ்ஐ 304 கிரேடு, பிஐஎஸ் ஆக்மார்க் பதித்த பிரீமியம் எவர்சில்வர், செம்பு, பித்தளை, மரப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ரூ.999 மதிப்பிலான கஷ்டமர் கார்டு நடப்பு மாதம் முடிய இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கார்டு மூலம் திருமணநாள், பிறந்தநாளையொட்டி பொருட் கள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசமாக வழங்கப் படுகிறது. ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்கு உள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஜெகன் மெட்டல் மார்ட் உரிமையாளர் கள் ஜெகநாதன், பாலசிங், தாமு செட்டியார் நகைக்கடை அபி லாஷ், ரிப்போஸ் கம்பெனி மேலாண்மை இயக்குநர் பால முரளி, கோட்டாஜூவல்லரி பத்ரி, விவி நேஷன் கம்பெனி உரிமையாளர் விவேக் மற்றும் ஈரோடு சுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.