districts

img

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, மலர் கண்காட்சி துவக்கம்

நாமக்கல், ஆக.2- வல்வில் ஓரி விழாவினை முன் னிட்டு, கொல்லிமலையில் மலர்  கண்காட்சியை சட்டமன்ற உறுப்பி னர் கு.பொன்னுசாமி துவக்கி வைத் தார். கடையேழு வள்ளல்களில் ஒரு வரான வல்வில் ஓரி மன்னன், வில் வித்தையில் சிறந்து விளங்கி, கொல் லிமலையை ஆண்ட மன்னர். இவர் தானத்தில் சிறந்து விளங்கியதால் கடையேழு வள்ளல்களில் ஒருவ ராக பொதுமக்களாலும், வரலாற்று அறிஞர்களால் போற்றப்படுகிறார். இவரது புகழுக்கு பெருமை சேர்க் கும் வகையில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா தமிழ்நாடு அர சின் சார்பில் ஆண்டுதோறும் நடத் தப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் கொல் லிமலை, செம்மேடு வல்வில் ஓரி  அரங்கில், வல்வில் ஓரி விழா மற் றும் சுற்றுலா விழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொல்லி மலை, வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்க விழா புதனன்று நடைபெற்றது. இவ் விழாவில் சேந்தமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் கு.பொன்னு சாமி, வருவாய் கோட்டாட்சியர் சர வணன் தலைமையில், வல்வில் ஓரி திருவுருவப்படத்திற்கு மலர்தூவி  மரியாதை செலுத்தி, மலர் கண் காட்சியினை துவக்கி வைத்தார்.

வல்வில் ஓரி விழாவில் தோட்டக் கலைத்துறையின் சார்பாக கொல் லிமலை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சி சிறப்பான  முறையில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்ததை சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி பார்வையிட்டார். மலர் கண்காட்சியில் குழந்தை களை கவரும் வகையில், 40 ஆயி ரம் வண்ண ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சோட்டா பீம், 15  ஆயிரம் பல வகை மலர்களால் அலங் கரிக்கப்பட்ட மலர் படுக்கை மற்றும்  மலர் அலங்காரம் ஆகியவை கண் ணாடி மாளிகையில் அமைக்கப் பட்டுள்ளது. 25 ஆயிரம் ரோஜா மலர் களால் அலங்கரிக்கப்பட்ட கங் காரு வடிவம், 20 ஆயிரம் பல  வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட முயல் வடிவம், 15 ஆயிரம் பல வண்ண மலர்களால் அமைக்கப் பட்டிருந்த இதய வடிவில் ஆன அமைப்பு, ஆசிய ஹாக்கி சாம்பி யன் அடையாளச் சின்னமான பொம் மன் மற்றும் கலைஞர் நூற்றாண்டு சின்னம் ஆகியவை அமைக்கப்பட் டுள்ளன. இம்மலர் கண்காட்சியில்  ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந் தூரியம், ஜிப்சோபில்லம், சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனி யம், சொர்க்க பறவை, கிளாடி யோஸ், டெய்சி, சம்பங்கி ஆகிய மலர்களால் இம்மலர் கண்காட்சி மிகவும் சிறப்பாக பொதுமக்கள் கண் கவரும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. வல்வில் ஓரி விழா தொடக்க நாளையொட்டி, கொல்லிமலை வாழ் மக்களின் பராம்பரிய கலை  நிகழ்ச்சி, தெருக்கூத்து, கும்மியாட் டம், பரதநாட்டியம், நாட்டுப்புறப் பாடல், நாடகம், கோலாட்டம், வல் வில் ஓரி குறித்த சொற்பொழிவு, பர தம், தப்பாட்டம், ஆர்கெஸ்ட்ரா, கிரா மிய நடனம், விழிப்புணர்வு நாடகம், சேர்வை நிகழ்ச்சி, புல்லாங்குழல் வாசித்தல், பாட்டு பாடுதல் உள் ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.