districts

img

சிறை பணியாளர்களுக்கு உடற்பயிற்சி மையம் திறப்பு

சேலம், செப்.14- சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் சிறை பணி யாளர்களுக்கான உடற் பயிற்சி மையத்தை சிறைத் துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிறை பணியாளர்  குடியிருப்பு பகுதியில் பணி யாளர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள சிறைத்துறை சார்பில் உடற்பயிற்சி மையத்தை திறக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறை மற்றும்  பெண்கள் சிறை ஆகியவற்றில் 350க்கும் மேற் பட்ட சிறை பணியாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இவர்களுக்கு மத்திய சிறை அருகி லேயே குடியிருப்பு வளாகம் உள்ளது. இவ் வளாகத்தில் சிறை பணியாளர்களுக்கான உடற்பயிற்சி மையம் திறப்பு விழா வெள்ளி யன்று நடைபெற்றது. சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு, உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.  இதன்பின் சிறை கண்காணிப்பாளர் வினோத் (பொ) கூறுகையில், பணி நேரம்  முடிந்ததும் உடற்பயிற்சி மேற்கொள்ள வசதி யாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த  உடற்பயிற்சி மையத்தில் சிறை பணியாளர் கள் மட்டும் இல்லாமல், அவர்களது குடும்பத் தில் உள்ள அனைவரும் இந்த உடற்பயிற்சி பயன்பெறலாம். சிறை பணியாளர்களின் மன  அழுத்தத்தை குறைக்கவும், பணியின் போது  எந்தவித அழுத்தமும் இல்லாமல் பணியாற் றவும் சிறைத்துறை சார்பில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.