ஈரோடு, ஏப்.23- சத்தியமங்கலத்தை அடுத்துள்ள செண்பகப்புதூர் ஊராட் சிக்குட்பட்ட 10 கிராமங்களில் உலக புத்தக தினத்தை முன் னிட்டு வீதி நூலகங்கள் திறக்கப்பட்டன. கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள், பெற்றோர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமெனில் நகர்ப்புறங்களை நாட வேண்டி உள்ளது. இத னால் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பெரும் சிரமங்க ளுக்கு உட்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நூல கங்களை மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் ஒரு புதிய முயற்சியாக வீதி நூலகங்களை அமைப்பதென பள் ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் சுடர் அமைப்பு ஆகி யன இணைந்து முடிவெடுத்தனர். வீதிகளில் செயல்படும் இந்த நூலகங்களில் இருக்கைகள் இருக்காது. கட்டடங்கள் இருக்காது. ஆனால் நூல்களை பாதுகாத்து பராமரித்திட தன் னார்வலர் செயல்படுவார். இவர் தேவையான நூல்களை வழங்கி வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைப்பார். அந்த வகையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத் துள்ள செண்பகப்புதூர் ஊராட்சியில் மேட்டூர், தங்கநகரம், குட்டை மேட்டூர், போயா கவுண்டனூர், குந்திபொம்மனூர் உள் ளிட்ட 10 கிராமங்களில் இந்த வீதி நூலகங்கள் தொடங்கப் பட்டுள்ளன. மேட்டூரில் இந்த வீதி நூலகத்தை ஒன்றிய கவுன்சிலர் வி. என்.சின்னசாமி தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமார், விதைகள் வாசகர் வட்ட செயலாளர் யாழினி ஆறுமுகம், சங்கமேஸ்வரன், சுடர் அமைப் பின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார். நிறைவாக, இந்த நூல கத்திற்கு நூல்கள் வழங்கப்பட்டன.