districts

img

ஈரோடு: தேர்தல் அலுவலகம் திறப்பு

ஈரோடு, ஏப். 2- பெருந்துறை சட்ட மன்ற  தொகுதியில் தேர்தல் பணி மனை திறப்பு விழா நடைபெற் றது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந் துறை சட்ட மன்ற தொகுதி யில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடை பெற்றது. இதில் கே.பி.சாமி தலைமை வகித்தார். திமுக தெற்கு மாவட்டச் செயலாள ரும், அமைச்சருமான சு.முத்துசாமி அலு வலகத்தை திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடா சலம், திமுக மகளிர் அணி மாலதி நாகரா ஜன், காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் ஜி.ராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செய லாளர் எஸ்.டி.பிரபாகரன், விசிக விஜய பாலன், மதிமுக வி.எம்.கந்தசாமி, முஸ்லீம்  லீக் மு.ஆரிப், மனிதநேய மக்கள் கட்சி சித்திக், மக்கள் நீதி மையம் பி.வி.முருகன், ஆம்  ஆத்மி சுனிதா, ஆதித்தமிழர் பேரவை ராமகிருஷ்ணன், கொமதேக கே.கே.பாலு  உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.