உதகை, நவ.11- குந்தா நீரேற்று மின் திட்டப்பணிக்காக எமரால்டு அணை யில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக் கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே காட்டுகுப்பையில், 1850 கோடி ரூபாயில் குந்தா நீரேற்று மின் திட்டப்பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 60 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. அடுத்தக்கட்டப் பணி கள் விரைவாக நடைபெற்று வருகிறது. காட்டுகுப்பையில் நடந்து வரும் நீரேற்று பணிக்காக எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்க மின்வாரியம் சார்பில் நடவ டிக்கை எடுக்கப்பட்டு, திங்களன்று காலை முதல் வினாடிக்கு, 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை திறக்கப்பட்டதால் தண்ணீர் நீரோடை வழியாக கரைபுரண் டோடியது. இதுகுறித்து குந்தா மின் திட்ட மேற்பார்வை பொறி யாளர் முரளி கூறுகையில், காட்டுக்குப்பை பகுதியில் நடை பெற்று வரும் குந்தா நீரேற்று மின் திட்டப் பணிக்காக எம ரால்டு அணையில் இருந்து திங்களன்று முதல் ஒரு மாதத் திற்கு, வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கரை யோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும். என்றார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறுகையில், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் எடக்காடு கால் வாய் வழியாக குந்தா பாலம் சென்று அடையும். எனவே, இந்த கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப் பாக இருக்கும் படி அறிவுறுத்தினார். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த கோவில், கிராம சாலையை வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், ஒரு சில வீடுக ளுக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில், எமரால்டு ஆற்றங் கரை ஓரம் உள்ள மைதானத்தின் ஒரு பகுதியில் விளையாட்டு பொருட்களை வைப்பதற்கான கட்டிடம் ஒன்று கட்டபட்டு வந்தது. ஆற்றில் வந்த வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த கட்டிடம் பாதி இடிந்து விழுந்தது.