districts

img

கிரிக்கெட் மைதானம் திறப்பு

நாமக்கல், டிச.15- குமாரபாளையத்தில் தனியார் கிரிக்கெட் விளை யாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சி ஞாயிறன்று  நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தனியார் கிரிக்கெட் விளை யாட்டு மைதானம் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற் றது. சேலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின்  வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு அழைப்பாள ராக கலந்துகொண்டு, விளையாட்டு மைதானத்தை திறந்த வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், பின் தங்கிய கிராமத்தில் இருந்து என்னால் உயர முடிந் தது என்றால், அனைவராலும் முடியும். நீங்கள் எந்த  துறையை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதில் உண்மை யாக உழைக்க வேண்டும்; நேர்மையாக நடக்க வேண் டும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக் கும். எனக்கு மைக்கில் பேசத் தெரியாது. ஆனால், பந்து  கொடுத்தால் வீச தெரியும். நான் கிரிக்கெட் விளை யாட்டு சொல்லித் தருகிறேன். இதன் மூலம் பலரும் தமிழ்நாடு லீக் மற்றும் பல்வேறு லீக் போட்டிகளில் பங்கு  பெற்றுள்ளனர். அனைவரும் தங்களது உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், என்றார்.