கோவை, மே 22- மறைந்த தோழர் எம்.என்.எஸ் வெங்கட் டராமன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு மற்றும் அகில இந்திய மாநாட்டு தீர்மானங்கள் குறித்த சிறப்பு பேரவை கூட்டம் ஞாயிறன்று கோவை கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் கோவை மாவட்ட இடைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இப் பேரவை கூட்டத்திற்கு கட்சியின் சிங்கை நக ரக்குழு செயலாளர் வி.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மறைந்த தோழர் எம்என்எஸ் வெங்கட்டராமனின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எம்.என்.எஸ் படத்தை திறந்து வைத்தார். இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி. பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்று, மறைந்த எம்.என்.எஸ் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.