கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மாநகர் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் வால்பாறை சிங்கோணாவில் அதிகபட்சமாக 125 மி. மீ, வால்பாறை தாலுகாவில் 97 மி.மீ சோலையார் அணைப் பகுதியில் 76 மி.மீ. மழையானது பதிவாகியுள்ளது. மேலும் அங்குள்ள கூழாங்கல் ஆற்றிலும் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நாளை வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். அதேபோல் நகராட்சி ஊழியர்களும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சியிலும் மழைநீர் தேங்கும் சுரங்கப் பாதைகளை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன