districts

ஆன்லைன் சூதாட்டம்: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

சேலம், நவ.7- மேட்டூர் அருகே ஆன்லைன் சூதாட்டத் தில் ரூ.30 லட்சத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், ஆற்றில் குதித்து தற் கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியைச் சேர்ந்தவர் கணேசன்  (49). இவருக்கு சிவகாமி (45) என்ற மனைவி யும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணே சன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18  ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலை யில், ஓசூரிலிருந்து மேட்டூருக்கு வந்த கணே சன், சொந்த கிராமத்தில் உறவினர்களை சந் தித்து விட்டு, நீர்தேக்க பகுதியான பண்ண வாடி காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப் போது, அவர் திடீரென காவிரி ஆற்றில் குதித் தார். இதனைக்கண்ட மீனவர்கள் உடனடி யாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த போலீசார், மீனவர்கள் உதவியு டன் கணேசனை தேடினர். ஆனால், கணேசன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவிரி கரையில் இருந்த கணேசனின் உடை மைகளை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில் கணேசன் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், ராஜேஷ் கண்ணா என்பவருக்கு  ரூ.8 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டும். கடனை அடைக்க ஓசூரில் உள்ள வீட்டை விற் பனை செய்து விடலாம் என மனைவியிடம் கேட்டபோது, அவர் மறுத்துவிட்டார். வாங் கிய கடனை கொடுக்க முடியாததால், கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை  செய்து கொள்கிறேன். நான் இறந்தவுடன் நான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வரும் பணத்தை கடன் வாங்கியவர்களிடம் தரவேண்டும். எனது வேலையை என்னு டைய 2 ஆவது மகளுக்கு வழங்க வேண்டும்  என எழுதி வைத்திருந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார், கணேசன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித் தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கணேசனின் உறவினர்கள் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்தின் மீது மோகம் கொண்ட கணேசன், வீட்டிலிருந்த தங்க நகைகளை விற்றும், உறவினர்களிடம் பணத்தை கடன் வாங்கியும் விளையாடினார். ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என மனைவியிடம் யோசனை தெரிவித்தார். இதற்கு மனைவி சம்மதம் தெரிவிக்காததால், மன உளைச்ச லில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என  தெரிவித்தனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாட்டில் தடை உத்தரவு அமலில் இருந் தும், கணேசன் போன்றவர்கள் தற்போது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து  வருகின்றனர். எனவே, காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.