districts

img

மக்களை அச்சுறுத்தும் ஓஎன்ஜிசி-யின் ராட்சச இயந்திரங்களின் பிரம்மாண்ட பள்ளங்கள்

தரங்கம்பாடி, ஜூன் 21- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள மேமாத்தூரில்  ஓஎன்ஜிசி நிறுவனம் இராட்சச இயந்திரங்கள் மூலம் பிரமாண்ட பள்ளங்களை தோண்டி வரு வதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேமாத்தூரில் கீழ்மாத்தூர் செல்லும் சாலையோரத்தில்(மஞ்சளாற்று கரை) 45 அடி ஆழத்திற்கும் மேல் இராட்சச இயந் திரங்கள் மூலம் பிரமாண்ட பள்ளங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் தோண்டி வருகிறது. மக்களை பீதியில் உறைய வைத்துள்ள இப்பள்ளங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், வட்ட செய லாளர் டி.இராசையன், வாலிபர் சங்க வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ், சிபிஎம் கிளை செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு கூறிய போது, ஒரு புறம் தமி ழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக் கப்பட்ட பகுதியாக அறிவித்து விட்டு மற்றொரு புறம் இயற்கை வளங்களை கொள்ளை யடிப்பதற்கும் அனுமதியளித்து வருகிறது.  கொரோனா ஊரடங்கில் மக்கள் முடங்கிக் கிடக்கும் சூழலில் ஹைட்ரோ-கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை வளங் களை கொள்ளையடிப்பதும் இடைவிடாது நடந்துக் கொண்டே இருக்கிறது. இச்சூழ லில் மேமாத்தூரில் என்ன செய்கிறார்கள்? என்றே தெரியாதவாறு பிரமாண்டமான பள் ளங்களை தோண்டி வைத்து இராட்சச கருவிகள் மூலம் பூமியை துளையிட்டு  வருவதால் என்ன நடப்பதென்றே தெரியா மல் மக்கள் திக்கு முக்காடி வருகின்றனர். இப்பணி குறித்து எந்த ஒரு அறிவிப்புமின்றி அச்சுறுத்தும் வகையில், பணியில் ஈடு படும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத வாறு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கீழ் நடை பெறும் வேலையை உடனடியாக நிறுத்துவ தற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவில்லை யெனில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.