districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி ஒருவர் பலி

கோவை, செப்.19- கோவை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலை தடுப்பு சுவரில் மோதி ஒருவர் பலியாகினார். கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (22). தனியார் நிறுவன  ஊழியர். இவர் திங்களன்று தனது நண்பர் விஜிஸ்  (20) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண் டிருந்தார். இருசக்கர வாகனத்தை சத்தியநாராயணன் இயக் கினார். அப்போது அவர்கள் துடியலூர், மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம்  கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் மோதியது.  இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த  காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள், இவர் களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சத்திய நாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார். விஜிஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

பென்னாகரம், செப்.19- பென்னாகரம் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை தடுக்காத வனத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரத்தை அடுத்த பூதிப்பட்டியில் ஏராள மானோர் வசித்து வருகின்றனர். இப் பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். வனப்பகுதியை சுற்றி உள்ள தால், இக்கிராமத்திற்கு அடிக்கடி காட்டு  யானைகள் மற்றும் பன்றிகள் அங்கு  பயிரிடப்பட்டுள்ள சாமை, கடலை, ராகி  உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து வனத் துறையினரிடம் பலமுறை தெரி வித்தும், மனு அளித்தும் எவ்வித நடவ டிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், பூதிபட்டிக்கு ரோந்து  பணி சென்ற பென்னாகரம் வனக்சரக  அலுவலர் செந்தில்குமார் தலைமையி லான வனத்துறையினரை அப்பகுதி  மக்கள் சிறை பிடித்தனர். அப்போது  அவர்கள் வனத்துறை அதிகாரி களிடம், எங்களுடைய ஆடு, மாடு  வனப்பகுதியில் மேய்ந்தால் அபராதம்  வசூலித்து வழக்குப்பதிவு செய்கின் றனர். ஆனால், கஷ்டப்பட்டு நாங்கள் வளர்த்து வரும் மானவரி பயிர்களை இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் சேதப்படுத்தி வருகிறது. இவ்வாறு சேதப்படுத்தும் பயிர்களுக்கு அரசு எவ் வித இழப்பீடும் வழங்குவதில்லை.  எனவே,எங்களின் வாழ்வாதா ரத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம்  உடனடியாக விளைநிலங்களுக்குள்  புகும் காட்டு விலங்குகளை தடுத்து  நிறுத்த நடவடிக்கை வேண்டும்   என வலியுறுத்தி வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நமக்கான இந்தியாவை நோக்கி  10 நாள் தொடர் வகுப்பு நாளை தொடக்கம்

திருப்பூர், செப். 19 – திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் “நமக்கான இந்தியாவை நோக்கி..” என்ற தலைப்பில் 10 நாள் தொடர்  வகுப்பு வியாழக்கிழமை முதல் தொடங்கு கிறது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  மார்க்சிய அடிப்படை தத்துவ, பொருளாதார,  அரசியல் சார்ந்த 10 நாள் தொடர் வகுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின் றன. அதன் தொடர்ச்சியாக 2023ஆம் ஆண் டுக்கான 10 நாள் தொடர் வகுப்பு மாவட்டக் குழு அலுவலகமான தியாகி பழனிசாமி நிலை யத்தில் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி 30  ஆம் தேதி முடிய நடைபெறுகிறது. தினமும்  காலை 6.30 மணிக்குத் தொடங்கி 7.30 மணிக்கு  இந்த வகுப்பு முடிவடையும். நமக்கான இந்தியாவை நோக்கி… என்ற  இந்த ஆண்டுக்கான தலைப்பில் நடத்தப்ப டும் இந்த வகுப்பின் முதல் நாள் அமர்வில்  மதச்சார்பின்மையைத் தகர்க்கும் போலி  தேசியவாதம் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு கருத்துரை ஆற்றுகிறார். 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வீதிக்குத்  தள்ளப்படும் விவசாயிகள், தொழிலாளர் வாழ்வு என்பது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரனும், 23 ஆம் தேதி சனிக்கிழமை ஜனநாயகத்தைக் காவு கேட்கும் சட்டத் திருத்தங்கள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜும் கருத்துரை ஆற்றுகின்றனர். 24ஆம் தேதி ஞாயிறன்று தொழில் களை அழிக்கும் கார்ப்ரேட்மயம் என்ற  தலைப்பில் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் கே.சுவாமிநாதன், 25ஆம் தேதி திங்க ளன்று தேசிய கல்விக்கொள்கை: கார்ப்ரேட் மயமும், காவிமயமும் என்ற தலைப்பில்  பொதுப்பள்ளி மேடை பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஆறாம் நாள் 26ஆம் தேதி செவ்வா யன்று வர்க்கச் சுரண்டலை தீவிரப்படுத்தும்  சமூக ஒடுக்குமுறைகள் என்ற தலைப்பில்  மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, ஏழாம் நாள் 27ஆம் தேதி புதனன்று ஏகாதிபத்தி யத்தின் இளைய பங்காளியாய்… என்ற  தலைப்பில் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், 28ஆம் தேதி  வியாழனன்று எட்டாம் நாள் அமர்வில் புதிய  வடிவங்களில் மெகா ஊழல்கள் என்ற தலைப் பில் ஆர்.எஸ்.செண்பகம், 29ஆம் தேதி வெள் ளியன்று ஒன்பதாம் நாள் அமர்வில் சட்ட நீதியைத் தகர்த்து இந்து ராஷ்டிரத்தை நோக்கி என்ற தலைப்பில் வழக்கறிஞர் ச. சிவக்குமார் ஆகியோர் உரையாற்றுகின்ற னர். நிறைவு நாளான செப்டம்பர் 30ஆம் தேதி  சனியன்று புதிய இந்தியாவை கட்டமைப் போம் என்ற தலைப்பில் கட்சியின் திருப்பூர்  மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உரையாற்றுகிறார். பத்து நாள் நடைபெறும் இந்த தொடர்  வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும்  பங்கேற்கலாம், அனுமதி இலவசம் என்று  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட கல்விக்குழு பொறுப்பாளர் எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 300 பேர்
 

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 300 பேர் திருப்பூர், செப்.19- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு உற் பத்தியை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60  வாடுகள் உள்ளன. வார்டுக்கு 5 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு  பணியாளர்கள் வீதம் 300 பேர் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் வீடு, வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை  மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் திருப்பூர் மருத்துவம னையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகத் தரப்பினர் கூறினர்.

திருப்பூரில் நாளை போக்குவரத்து மாற்றம்

திருப்பூர், செப். 19 – திருப்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற இருப்ப தால் வியாழக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இதன்படி அனைத்து கனரக சரக்கு  வாகனங்களும் அன்று காலை 11 மணி  முதல் இரவு 10 மணி வரை மாநகரத்திற் குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு செல் லும் பேருந்துகள் அனைத்தும் மதியம்  சுமார் 4 மணி முதல் இரவு 8 மணி வரை  பழைய வடக்கு வட்டார போக்குவரத்து சந்திப்பு மற்றும் 60 அடி ரோட்டில் பய ணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண் டும். 60 அடி ரோடு தற்காலிக பேருந்து  நிலையமாக செயல்படும். அதேபோல்  பெருமாநல்லூரில் இருந்து புதிய  பேருந்து நிலையம் வரும் பேருந்துக ளும் போயம்பாளையத்தில் பயணி களை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும்.  மேலும் அவிநாசி, பெருமாநல்லூரில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் பூண்டி, பூலுவ பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக அங்கு செல்ல வேண்டும். பழைய பேருந்து நிலையத்திலி ருந்து பெருமாநல்லூர் செல்லும் பேருந் துகள் மற்றும் அனைத்து வாகனங்க ளும் அவிநாசி சாலை வழியாக திருமு ருகன் பூண்டியிலிருந்து பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்லும். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், அவி நாசி செல்லும் வாகனங்கள் மேற்குறிப் பிட்ட நேரத்தில் ராஜீவ் நகர் சிக்னல், செல்லாண்டி அம்மன் துறை, மின்மயா னம், ஊத்துக்குளி ரோடு, தலைமை தபால் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவி நாசி ரோடு வழியாக செல்லும். காங்கேயம் ரோடு, நல்லூரிலிருந்து திருப்பூர் வரும் வாகனங்கள் முத்தனம் பாளையம் நால்ரோடு, கோவில்வழி, பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவு வழி யாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப் படும். பல்லடம் சாலையிலிருந்து தாரா புரம் செல்லும் வாகனங்கள் வீரபாண்டி  பிரிவு, காளிகுமாரசாமி கோவில், பிள் ளையார் நகர், கோவில் வழி வழியாக மதியம் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும். பல்லடம் சாலையில் இருந்து அவி நாசி மார்க்கம் செல்லும் வாகனங்கள் வீரபாண்டி பிரிவில் இருந்து சுற்றுச்சா லையில் பூண்டி ரிங் ரோடு வழியாக  செல்ல வேண்டும்.  மங்கலம் சாலையிலி ருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு  செல்லும் வாகனங்கள் பெரியாண்டிபா ளையம், வீரபாண்டி பிரிவு வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்ப டும். மங்கலம் சாலையிலிருந்து அவி னாசி மார்க்கமாக செல்லும் வாகனங் கள் அணைப்பாளையம் பிரிவு சிறுபூலு வபட்டி வழியாக அவினாசி செல்ல லாம். என்று கூறப்பட்டுள்ளது.

தேனீக்கள் கொட்டியதில் விநாயகர் சிலையை கரைக்க முயன்ற 49 பேர் காயம்

தேனீக்கள் கொட்டியதில் விநாயகர் சிலையை கரைக்க முயன்ற 49 பேர் காயம் ஈரோடு, செப்.19- கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சிலையை கரைக்க முயன்ற போது தேனீக்கள் கொட்டியதில் 49 பேர்  காயமடைந்தனர். ஈரோடு, மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே  உள்ள தங்கமலை கரடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி கிராம மக்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழி பாடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து திங்களன்று இரவு இந்த சிலையை கரைப்பதற்காக ஏராளமானோர் வேன்  மற்றும் இருசக்கர வாகனங்களில் தங்கமலை கரடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றனர். இதன்பின் சிறு வர்கள் வேனில் இருக்க, பெரியவர்கள் கரையில் இருந்த வேப்பமரத்தை பிடித்து வாய்க்காலுக்குள் விநாயகர் சிலை களை கரைக்க இறங்க முயன்றனர். அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் கூடு மீது எதிர்பாராதவிதமாக ஒருவரது  கை பட்டுள்ளது. இதில் கூட்டிலிருந்த தேனீக்கள் கலைந்து  அங்கும் இங்குமாக பறந்தது. இதனால் அங்கிருந்த அனை வரும் அலறியடித்து ஓடினர். ஆனால், தேனீக்கள் விரட்டி  விரட்டி கொட்டியதில், தங்கமலைகரட்டைச் சேர்ந்த சச்சின்  (12), கிருஷ்ணகுமார் மகள் ஜோஸ்னா (10), முருகேசன் மகன்  சஞ்சய் (15), சீனிவாசன் மகள் சுதிக்ஷனா (3), மூர்த்தி (50), மூர்த்தி மகன் நவீன் (8), பாலமுருகன் (45), பாலமுருகன் மகன் நவனீஸ் (8) உள்பட 49 பேர் காயமடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேனில் ஏற்றிக்கொண்டு கோபி அரசு  மருத்துவனையில் சேர்த்தனர். இதில் சச்சின், ஜோஸ்ணா, சஞ் சய், சுதிக்ஷனா, மூர்த்தி, நவீன், நவனீஸ், பாலமுருகன் ஆகி யோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 42 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 

தடையை மீறி ஊர்வலம்: இந்து முன்னணியினர் மீது வழக்கு

தடையை மீறி ஊர்வலம்: இந்து முன்னணியினர் மீது வழக்கு சேலம், செப்.19- தாரமங்கலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி யினர் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில், இந்து முன் னணி அமைப்பினர் விநாயகர் சிலை அமைத்திருந்தனர். அதனை தாரமங்கலத்தில் ஊர்வலமாக எடுத்து செல்ல ஏற் பாடு செய்தனர். இதனையறிந்த போலீசார், இந்து முன்னணி நிர்வாகிகளிடம் ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி கிடை யாது, என்றனர். ஆனால், போலீசாரின் உத்தரவை மதிக்கா மல், சங்ககிரி பிரதான சாலையில் ஊர்வலமாக புறப்பட்டனர். தினசரி மார்க்கெட் அருகில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஒரு வேனில் ஏற்றி அங்குள்ள தனி யார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும், தடையை மீறி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்திய இந்து  முன்னணி நிர்வாகிகள் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் சேலம், செப்.19- ஆத்தூர் அருகே குடிநீர் வழங்க வேண்டும் என வலியு றுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி, 8 மற்றும் 9 ஆவது வார்டு பகுதிகளில் ஆழ்துளை  கிணறுகளில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் பல நாட்கள் ஆகியும் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர் வாகத்திடம் தகவல் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பைத்தூரில் ஆத்தூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆத்தூர் வட்டாட்சியர் மாணிக்கம், காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற் றும் வருவாய்த்துறையினர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, மோட்டார் பழுது நீக்கப்படும் அல்லது மாற்று வழி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரி கள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.

முட்டை விலை உயர்வு

நாமக்கல், செப்.19- நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமான முட்டைக்கோழிகள் வளர்க் கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற் பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப் புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணைகளில் ரொக்க விற் பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறி வித்து வருகிறது. இந்நிலை யில், திங்களன்று நடை பெற்ற கூட்டத்தில் முட்டை  விலை 10 பைசா உயர்த்தப் பட்டு, ஒரு முட்டையின் கொள் முதல் விலை ரூ.4.85 ஆக நிர் ணயிக்கப்பட்டுள்ளது.