districts

img

ஜோஸ் ஆலுக்காஸ் வழக்கில் மேலும் ஒருவர் கைது

 தருமபுரி, டிச. 4- ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில் குற்றவாளியின்  மாமியாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுக் காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில், தருமபுரியைச் சேர்ந்த விஜய் (24) என்பவரை தனிப்படை போலீசார் தேடி  வருகின்றனர். இதனிடையே, விஜய்யின் மனைவி நர்ம தாவை, தனிப்படை போலீசார் ஆனைமலையில் வைத்து  கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 3.2 கிலோ தங்கம்,  வைரம், பிளாட்டினம் நகைகள் மற்றும் 4 ஆயிரத்தை பறிமு தல் செய்தனர். இந்நிலையில், நர்மதாவின் தாயாரும் கொள் ளையனின் மாமியாருமான யோகராணியிடம் கோவை தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது விஜய் கொடுத்த நகைகளை வீட்டருகே புதைத்து வைத்தி ருப்பது தெரியவந்தது. இதனையடுத்து யோகராணி மண் ணில் புதைத்து வைத்திருந்த 125 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். தற்போது பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையி, ஜோஸ் ஆலுக் காஸ் நகைக்கடை வழக்கில் தேடப்படும் குற்றவாளி விஜய் யின் மாமியர் யோகராணியை தனிப்படை போலீசார் பிடித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடமிருந்தும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.