districts

img

சூறாவளிக் காற்றுடன் கனமழை ஒரு லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன

சூலூர், ஏப்.23- சூலூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த திடீர் கனமழை காரணமாக, சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம டைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலை யில், திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய் தது. இதனால் ஜல்லிப்பட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், தாளக் கரை, கரையாம்பாளையம், செஞ்சேரி, கள்ளப்பாளையம்  உள் ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டி ருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால்  விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய்  வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  விவசாயிகளின் தோட் டங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்து வரு கின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சுல் தான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெரும்பா லான விவசாயிகள் வாழை சாகுபடி பிரதான தொழிலாக  கொண்டுள்ளோம். இந்நிலையில், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் வேரோடு சரிந்து விட்டன.  இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அறு வடைக்கு இன்னும் 7 மாதங்கள் நிலையில், சாய்ந்த வாழை  மரங்களை எதுவும் செய்ய முடியாது. சரிந்த வாழை மரங் களை அப்புறப்படுத்த ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு  மேல் செலவாகும். எனவே அரசு இதனை பரிசீலித்து உரிய  இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர்.