districts

img

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்

கோவை, மே 20- மேட்டுப்பாளையம் அருகே 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியானார்.மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். கேரளா மாநிலம், வயநாடு புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (65). இவரும் இவரது மகன் யோபேஷ் (35), யோபேஷ் மகள் அனாமிகா(9) மற்றும் உறவினர்கள் தாமஸ் (68), ஜார்ஜ் (60) ஆகியோர் கடந்த 16 ஆம்தேதி வயாநட்டில் இருந்து வேளாங்கண் ணிக்கு சுற்றுலா ென்றனர். பின்னர், அங்கிருந்து உதகை வழியாக ஊர் திரும்பினர். காரை ஜோஸ் ஓட்டி வந்தார். இந்நிலையில், வியாழனன்று காலை 5.30 மணிக்கு மேட்டுப் பாளையம் உதகை சாலையில் 3ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் கார் சென்றது. அப்போது கார் திடீ ரென கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் விழுந் தது. இதில், காரை ஓட்டி வந்த ஜோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும், காரில் பயணம் செய்த யோபேஷ், அனாமிகா, தாமஸ் மற்றும் ஜார்ஜ் ஆகி யோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளை யம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பா ளர் பாலமுருகன்,மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம்,உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வ நாயகம் உள்ளிட்ட போலீசார் காரில் படுகாயங்களுடன் இருந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேட்டுப் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.