districts

லாரி மீது பேருந்து மோதி விபத்து ஒருவர் பலி

ஈரோடு, மே 6- பெருந்துறை அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 16 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூரில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச் சிக்கு வியாழனன்று ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 25 பயணிகள் இருந்த னர். இதேபோல் சேலத்தில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி இரும்பு குழாய் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. பெருந்துறை அருகே உள்ள டீச்சர்ஸ் காலனி பிரிவு என்ற பகுதியில் சென்றபோது லாரியை முந்தி செல்ல முயன்ற ஆம்னி பேருந்து எதிர்பாராத வகையில் லாரியின் பக்க வாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த  17 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த பயணிகள்  ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையே இந்த விபத்தில் படுகாயமடைந்த சரஸ்வதி (74) என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.