திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையத்தில் வசிக்கும் கேரளா மக்கள், ஞாயிறன்று ஓணம் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர். அதிகாலை முதலே ஆறு வகை பூக்களை கொண்டு அத்தப்பூக் கோலமிட்டும், கேரள பாரம்பரிய உடை அணிந்து ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தனர்.