சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.3 ஆம் தேதியன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஈரோட்டில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வாயன்று பல்வேறு பகுதிகளில் கொண்டாடினர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ், மாவட்டப் பொருளாளர் ராஜு, நகரச் செயலாளர் செந்தில்குமார், நகரத் தலைவர் ஆனந்தன் மற்றும் ரேணுகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.