districts

img

காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தையொட்டி மாணவர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு

பொள்ளாச்சி, மே 6- பொள்ளாச்சி அடுத்த வடசித்தூர் கிராமத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர் காரல் மார்க்ஸ் 203 வது பிறந்ததினத்தையொட்டி இந்திய மாணவர்கள் சங்கத்தினர் மரக்கன்றுகள் நட்டனர்.  கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை விரிவாகத்தின் போது நூற்றுக்கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர் காரல் மார்க்ஸின் 203 வது பிறந்த தினத்தையொட்டி வடசித்தூர் இந்திய மாணவர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியைதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி துவக்கி வைத்தார்.  இதில், இந்திய மாணவர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா துணை தலைவர் கௌதம்,கமிட்டி உறுப்பினர் சரவணன், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதில் 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

;