districts

“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்”

தமிழகத்தில் கொண்டாடப்படும் வேறு எந்தப் பண்டிகையையும் விட பொங்கலுக்கு சிறப்பான தனித் துவம் உண்டு. இரண்டு அம்சங்களில் பொங்கல் மற்ற பண்டிகைகளில் இருந்து வேறுபடுகிறது. சாதி, சமயங்களுக்குள் மற்ற பண் டிகைகள் சிறைப் பட்டு கிடக்க பொங்கல் மட்டும்  ஓர் இன திருவிழா வாக கொண்டா டப் படுகிறது. இரண்டாவ தாக பொங்கல் என்பது தீட்டு அணுகாத திரு விழா. பொங்க லுக்கு பிறப்பு,  இறப்பு தீட்டுக்கள் கிடையாது. ஒரு வேளை பொங்கலன்று காலையில் ஏதே னும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும் மிக விரைவாகச் சடங்குகளை முடித்து விட்டு வீட்டைப் பூசி மெழுகிப் பொங்கல் கொண்டாடும் பழக்கம் இன்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு ஆகிய மண்ணுக்கு அடி யில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் பொங்கலுக்கு படைக்கப்படுபவை. இவை உயர் சாதியினர் என சொல்லப் படுபவர்களாடல விலக்கப்பட்டவை.  இன்றும் இவை பெரும் கோயில்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதை  நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவே பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்கு சாட்சி. தைப்பொங்கலை அடுத்து தென் மாவட்டங்களில் கொண்டாடப்படும் திருவிழா “சிறுவீட்டுப் பொங்கல்”. மார் கழி மாதம் 30 நாட்களும் அதிகாலை யில் வாசல் தெளித்து கோலமிட்டு சாணத் தில் பூ சொருகி வைக்கும் பழக்கம்  உண்டு. பீர்க்கு, பூசணி, செம்பருத்தி ஆகிய பூக்களே சாணத்தில் செருகப் படும். மாலையில் வாடிவிடும் இந்த பூக் களைச் சாணத்துடன் சேர்த்துக் காய வைத்து விடுவார்கள். பொங்கல் முடிந்து 8 - 15 நாட்கள் கழித்து சிறு வீட்டுப் பொங் கல் கொண்டாடப்படும். பெண் பிள்ளை களுக்காகவே வீட்டுக்குள் களி மண் ணால் ஆன சிறு வீடு கட்டப்படும். பொங் கல் அன்று சிறுவீட்டு வாசலில் பொங்க லிடப்படும். பிறகு பொங்கலையும் பூக்க ளால் ஆன எழுத்துகளையும் பெண்கள் ஆற்றில் விடுவர். “மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன் னாளால் நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்” எனும் திருப்பாவை பாடல் பலரும் அறிந்ததாகும். ஆனால் சங்க  இலக்கியங்களில் தை நீராடல் குறித்தும் குறிப்பிடப்படுகிறது. “தாயருகே நின்று  தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி” என்கிறது பரிபாடல். இங்கே நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது, ஆண்டாள் தன் திருப்பாவையில் மார்கழி முதல் நாளை  குறிப்பிடவில்லை. மதிநிறைந்த நன் னாள் என்றுதான் குறிப்பிடுகிறார். மதி  நிறைந்த நன்னாள் என்பது பௌர்ணமி. எனவே திருப்பாவை நோன்பு மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கி தை மாதம் பௌர்ணமியில் முடிகிறது. தைப்பூசம்  என்பது தைப்பௌர்ணமி. தமிழ் மாதங் கள் அனைத்தும் பௌர்ணமியிலி ருந்தே தொடங்குகின்றன. எனவே தைப் பூசம் என்பதுதான் தமிழ்ப் புத்தாண்டு.  மார்கழி நீராடலில் தொடங்கும் திருப் பாவை நோன்பு தை நீராடலில் முடிகி றது. இந்த காலகட்டம்தான் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் கால கட்டம். தமிழ் புத்தாண்டு பற்றி பேசுகிற இரு  தரப்பாரும் இந்த விஷயத்தில் விஷ யத்தை கணக்கில் எடுத்துக் கொள்வ தில்லை. நமது பண்பாடு குறித்த தெளிவு டன் தான் நாம் தமிழ் புத்தாண்டு குறித்த விஷயத்தை அணுக வேண்டும். உழைக்கும் மக்கள், வீட்டுப் பெண்க ளின் நம்பிக்கைகள் சார்ந்து கொண்டா டப்படும் இந்திய திருவிழாக்களிள் தமி ழர்களின் நன்றி உணர்வை வலியுறுத்து பவை. வெப்ப மண்டல நாடுகளில் அறு வடைத் திருநாட்கள் வெவ்வேறு பெயர் களில் கொண்டாடப்படுகின்றன. மற்ற  பண்டிகைகளில் நாம் பிரார்த்தனை களை முன்வைக்கிறோம். வேண்டுதல் களையும் கோரிக்கைகளையும் முன்  வைக்கிறோம். ஆனால், அதற்கு மாறாக பொங்கலில் நமது வாழ்க் கைக்கு அடிப்படையான உழவர்க ளுக்கும், சூரியனுக்கும், மாடுகளுக் கும், நன்றி செலுத்துகிறோம். இப்படி பல்வேறு அம்சங்களில் மாறுபட்டு விளங்குகிற பொங்கலைக் கொண்டாடுவோம்… தொ.பரமசிவன்  நூலில் இருந்து...