கோவை. அக்.10- மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர் வோர் கூட்டமைப்பினர் வரும் 16ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருப்ப தாக கூட்டமைப்பினர் தெரிவித்துள் ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப் பின் நிர்வாகிகள் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், கடந்தாண்டு உயர்த்தப்பட்ட மின்கட் டணத்தால் தமிழக முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க பல்வேறு நடவ டிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். மின் வாரியம் அவர்களுக்கு தோன்றியது போல் மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி கேட்டார்கள். மின் ஆணைய மும் அவர்களுக்கு அனுமதி வழங்கி யுள்ளது. அப்போது தமிழக அமைச்ச ரிடம் முறையிட்டோம். இப்படி மின் கட்டணத்தை உயர்த்தினால் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறையே இருக்காது என்றோம். எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினார்கள். சிறு குறு மற்றும் நடுத் தர தொழில் துறையை காப்பாற்ற இந்த கூட்டமைப்பை தொடங்கினோம். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத் தும் வகையில் நாங்கள் செயல்பட வில்லை. நிலைக்கட்டணம் என்பது எந்த வகையிலும் சரியில்லை என்று எதிர்த்து வருகிறோம். மேலும், பீக் ஹவர் கட்டண உயர்வையும் எதிர்க்கி றோம். இந்த கட்டண உயர்வை உடன டியாக திரும்பப்பெறக்கோரி வலியு றுத்தி வருகிறோம். தொழில்துறை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ள நிலையில் இதனை மின்சார வாரியத் தின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கை களை வலியுறுத்தினோம். ஆனால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற் றப்படவில்லை. எங்கள் மீது எந்த அர சியல் திணிப்பும் இல்லை. முதல மைச்சர் எங்களை சந்தித்திருந்தால் இந்த பிரச்சனைக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக் கும். இந்த சூழலில், 16ஆம் தேதி சென் னையில் உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட உள்ளோம். இதில் தமிழ கம் முழுவதிலும் இருந்து தொழில் துறையினர் கலந்து கொள்கிறார்கள் என்றார். இந்த செய்தியாளர் சந்திப் பின் போது கூட்டமைப்பின் நிர்வாகி கள் சாகுல் ஹமீது, ரவீந்திரன், மணி, சவுந்திர குமார் ஆகியோர் உடனி ருந்தனர்.