districts

img

ஆக.10-ல் சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு : கோவையில் வரவேற்புக்குழு அமைப்பு

கோவை, ஜூலை 7- சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் முதல் மாநில  மாநாடு ஆக.10 ஆம் தேதியன்று கோவையில் நடைபெற உள்ள நிலை யில், அதற்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான வர வேற்புக்குழு அமைப்புக் கூட்டம், கோவையில் சனியன்று நடை பெற்றது. சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பாளர் கே.பழனிசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மலர்விழி, கோவை மாவட்டத் தலைவர் கே.என்.ராம சாமி, செயலாளர் லதா, பொருளா ளர் சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று கோவை, உப்பிலி பாளையத்தில் உள்ள சாய் மஹாலில் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநாட்டு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக என்.அரங்கநாதன், செயலாளராக கே.பழனிசாமி, பொரு ளாளராக கே.ஜானகி மற்றும் ஜே. ஆர்.சுப்பிரமணியன், துணைத்தலை வர்களாக கே.என்.ராமசாமி, எஸ். மதன், கே.அருணகிரி, இணைச்செய லாளராக பி.செந்தில்குமார், ராஜேந்திரன், பொன்னையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, மாநாட்டு நிதிக்குழு தலைவராக எஸ்.மதன், உறுப்பினர்களாக கே.என்.ராமசாமி, எஸ்.பாலகிருஷ்ணன், எஸ்.குப்புராஜ், ராஜேந்திரன், முருகேசன், பழனிச்சாமி, சுதா, லதா, சின்னம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.