நிறுத்தி வைக்கப்பட்ட முட்டைகளை பெற்றுக்கொண்ட ஓமன்
நாமக்கல், டிச.24- நிறுத்தி வைக்கப்பட்ட முட்டைகளை ஓமன் அரசு பெற்றுக்கொள்ள, நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் நன்றி தெரிவித்துள்ள னர். நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் திங்க ளன்று, சங்க அலுவலகத்தில் செய்தியா ளர்களை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் தலைவர் பேசுகையில், ஓமன் நாட்டு அரசு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிற்கு மட்டுமே இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய முடியும் என காரணம் கூறி, சோகர் (Sohar) துறைமுகத்தில் 31 கண்டெய்னர்களில் வைக் கப்பட்டிருந்த சுமார் 2 கோடி முட்டைகளை நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. மேலும், கப்பலில் சென்று கொண்டிருந்த 10 கண் டெய்னர்களும் நடுக்கடலில் நிறுத்தப்பட்டன. இதனால், நாமக்கல் மண்டல கோழி முட்டை ஏற்றுமதியாளர்கள், கோழிப் பண்ணையா ளர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனை யறிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், நிதித்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முட்டை களை ஓமன் அரசு அனுமதிக்க வலியுறுத்து மாறு கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் இந்திய தூதரக அலு வலர்கள், ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் பேசி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 31 கண்டெய்னர்களில் இருந்து 2 கோடி முட்டைகளை, ஓமன் நாடு எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேபோல, ஓமன் நாட்டில், திங்களன்று நடைபெற்ற தூதரக அதிகாரிகள், மத்திய அரசுத்துறை அலுவலர்கள் அளவிலான பேச்சுவார்த் தையில், கப்பலில் சென்று கொண்டிருக்கிற 10 கண்டெய்னர் முட்டைகளையும், ஓமன் அரசு எடுத்துக் கொள்வதாக தெரிவித் துள்ளது. இதனால், நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள், ஒன்றிய, மாநில அரசு கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக் கையால் பெருமளவிலான பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். எனவே, ஓமன் நாட்டு அரசு, அனைத்து நாமக்கல் முட்டைகளையும் எடுத் துக் கொள்வதற்கு பெரிதும் உறுதுணை புரிந்த அனைவருக்கும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில் நன் றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், ஓமன் நாட்டு அரசு வருகின்ற 2025 ஜனவரி மாதம் முதல், தமது நாட்டிற்கு இந்திய முட்டைகள் எவ்வளவு தேவையோ அதற்கு ஏற்ற எண்ணிக்கையிலான அடிப் படையில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற அனுமதி முறையை கொண்டு வந்துள்ளது. அந்நாட்டு அரசு அனுமதிக்கும் எண்ணிக்கை யிலான அளவிற்கு மட்டுமே நாமக்கல் முட் டைகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. வருங்காலங்களில் பெரும்பாலான உலக நாடுகள் தமது நாட்டிலேயே தேவைக் கேற்ற முட்டைகளை உற்பத்தி செய்யும் பணி களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள போதிலும், இந்திய முட்டை ஏற்றுமதி தொழிலை இது பாதிக்காது என்றும், கத்தார் நாட்டை பொருத் தவரை, அவர்கள் 60 கிராம் எடை கொண்ட முட்டைகளை எதிர்பார்க்கின்றனர். பொது வாக 55 முதல் 60 கிராம் முட்டைகள் மட்டுமே தரமாகவும் உடையாமலும் அனுப்பி வைக்க முடியும். எனவே, கத்தார் நாட்டுக்கு 55 கிராம் எடையுள்ள முட்டைகள் வழக்கம் போல நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப் படும், என்றார்.
திறன் இழப்பு: டாஸ்மாக் நிர்வாகம் நிவாரணம் வழங்க உத்தரவு
ஈரோடு, டிச.24- பணியின் போது ஏற்பட்ட திறன் இழப்பு ஏற்பட்டவருக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.2 லட்சத்து 87 ஆயி ரத்து 973 வழங்க நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரோடு அருகே 46 புதூர் பகுதி யைச் சேர்ந்தவர் ராஜன். டாஸ்மாக் ஊழியரான இவர் கடந்த 17.2.2021 ஆம் தேதியன்று அரசு மதுபானக் கடை எண்.3847 இல் பணியிலிருந் தார். இரவு 10 மணிக்கு கடை விற் பனையை முடித்து கடை ஷட்டரை சாத்தி விட்டு கடைக்குள் இருப்பு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாத்தியிருந்த கதவு தட் டப்பட்டது. ராஜன் கதவைத் திறந்த போது ஒருவர் மதுபானம் வேண்டு மென்று கேட்டார். கடை விற்பனை நேரம் முடிந்து விட்டது. இனி விற் பனை செய்ய முடியாது, நாளை கடை திறந்த பிறகுதான் விற்பனை செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார். அப் போது மேலும் இருவர் சேர்ந்து கொண்டு மதுபாட்டில் கொடுக்க வேண்டும், அதுவும் காசில்லாமல் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத் தினர். ராஜன் முடியாது என்று கூறி கதவை சாத்தி தாழிட்டுக் கொண் டார். அதன்பின் கடை கணக்கை முடித்து 10.30 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் செல்வதற் காக கரூர் பிரதான சாலை சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜனை வழிமறித்து அந்த கும்பல் கடுமையாகத் தாக்கினார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ராஜனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவம னையில் சேர்ந்து தொடர் சிகிச்சை பெற்றார். ஆயினும் அவரது இடது கண் பார்வை பறிபோனது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார ளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப் பட்டது. அந்த கும்பல் கைது செய் யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், வேலை நேரத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால் தனக்கு ஏற்பட்ட திறன் இழப்பிற்கு வேலை யாள் இழப்பீட்டு சட்டப்படி நிவார ணம் கோரினார். அவரது முறையீடு ஏற்றுக் கொள்ளப்பட்டு குன்னூர் பணி யாளர் இழப்பீட்டு ஆணையர் மன்றம் (இருப்பு ஈரோடு) பல்வேறு கட்ட விசா ரணைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கி னார். அதில் வேலையின் காரணமாக ஏற்பட்ட அசாதாரணமான சம்பவத் தால் ராஜனுக்கு ஏற்பட்ட திறன் இழப் பிற்கு நிவாரணமாக ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 973 வழங்க வேண்டுமென் றும், சம்பவம் நடந்த தேதியிலிருந்து 12 சதவிகிதம் வட்டி கணக்கிட்டு கொடுக்க வேண்டுமென உத்தரவிட் டார். அதன்படி டாஸ்மாக் நிர்வாகம் தொழிலாளர் இணை ஆணையர் மூல மாக நிவாரணம் வழங்க வேண்டும் என ராஜன் கேட்டுள்ளார்.
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, டிச.24- காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தினர், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.தெற்கு ஒன்றியத் தலைவர் ஆர்.சீதா தலை மையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.ஜெகநாதன், துணைத்தலைவர் சுப்பிர மணியம், கிளைச் செயலா ளர் கிட்டு, ஒன்றியப் பொரு ளாளர் கிருஷ்ணவேணி உட் பட பலர் பங்கேற்றனர்.
கால்நடை தீவனத்தால் மாடுகள் பலி? ஆய்வு செய்ய கோரிக்கை
உடுமலை, டிச.24- உடுமலை பகுதியில் தனியார் நிறுவனங்களில் வாங்கிய கால்நடை தீவனங்களை சாப்பிட்ட 6 மாடுகள் கடந்த வாரம் இறந்துள்ளன. இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப் போர் முன்பு தமிழக அரசின் கூட்டுறவு சங்கத்தின் பால் நிறு வனமான ஆவின் மூலம் பால் விற்பனை செய்து வந்தார்கள். பின் நாட்களில் பல தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் வங்கி கடன், மாட்டுத்தீவனம் என பல கவர்ச்சியான சலுகை கள் தருவதால் ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் இப்ப குதியில் பெயர் அளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறன்றன. தற்போது தனியார் மாட்டுத்தீவனங்களை கால்நடைகளுக்கு தருவதால் பல மாடுகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருவ தாக புகார் வந்து உள்ளது. கடந்த வாரத்தில் கூட 6 மாடுகள் பலியாகியுள்ளன. எனவே கால்நடை துறை அதிகாரிகள் கால் நடை களுக்கு தரப்படும் தீவனங்களின் தரம் குறித்து உடனடி யாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன் தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் முக்கிய வாழ்வாதார மாக கால்நடை வளர்ப்பின் மூலம் பால் உற்பத்தி செய்து வருகி றார்கள். இவர்களின் நலன் மற்றும் கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு தீவனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாகுபடியும் நீர் மேலாண்மையும்: நிழலி கவுண்டம்பாளையம் பள்ளி குழு ஆய்வு
சாகுபடியும் நீர் மேலாண்மையும்: நிழலி கவுண்டம்பாளையம் பள்ளி குழு ஆய்வு திருப்பூர், டிச. 24 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக காங்கேயம் வட்டம் நிழலி கவுண்டம்பாளையம் மாணவர்கள் குழு “சாகுபடியும், நீர் மேலாண்மையும்” என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண் டுள்ளனர். நிழலி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு அருகிலேயே மேய்ச்சல் நிலத்தில் நீர் மேலாண்மை உபகரணத்தை அமைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சுற்றிலும் உள்ள விவசாயத் தோட்டங்களில் ரசாயன உரங் கள், களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகள் இட்டு விவ சாயம் செய்கின்றனர். இதனால் மண்ணின் வளம் உயிர் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறும் இவர்கள் மேய்ச் சல் நிலங்கள் மட்டுமே இது போன்ற பாதிப்பை சந்திக்கா மல் இயற்கை வேளாண்மை செய்வதற்கு உகந்ததாக உள் ளது என்று தெரிவித்துள்ளனர். மேச்சல் நிலங்களில் உள்ள உயிர் வேலிகளில் மருத்துவ தாவர நாற்றுகளை தேர்வு செய்து தங்கள் இயற்கை வேளாண்மை உபகரணத்தில் வைத்து வளர்த்து இருக்கி றார்கள். வெட்டிவேர் விவசாயத்தைப் பற்றியும் தாங்கள் கண் டுபிடித்த நீர் மேலாண்மை உபகரணத்தை பற்றியும் அவர்கள் விளக்கி கூறியுள்ளனர்.
வாட்ஸ் ஆப் மூலம் ரூ.7.47 லட்சம் மோசடி
திருப்பூர், டிச.24- கே.ஒய்.சி. அப்டேட் செய்யுங்கள் என வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 799 எடுத்து மோசடி செய்யப்பட்டுள் ளது. வங்கி பெயரில் வரும் எந்தவிதமான செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறித்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் தங்கராஜ் தனி யார் நிதி நிறுவன உரிமையாளர். இவருக்கு அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து, வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியின் லோகோ பெயர் உள்ளிட்டவை யுடன் வாட்ஸ் அப்பில் உங்களது வங்கி கணக்கு கே.ஒய்.சி. அப்டேட் செய்ய வேண்டும். இன்று கடைசி நாள். அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும். உடனடியாக கே.ஒய்.சி. அப்டேட் செய்யுங்கள் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வங்கி யில் இருந்து தான் குறுஞ்செய்தி வந்துள்ளாதக நம்பி தங்க ராஜ், வாட்ஸ் அப்பில் வந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயர், பிறந்த தேதியை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 4 பரிவர்த்தனைகளில் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 799 எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார். பொதுமக்கள் யாரும் வங்கியின் பெயரில் வாட்ஸ்அப் அல்லது வேறு வகையில் ரிவார்ட் பாயிண்ட் செய்ய கடைசி நாள் என்றோ அல்லது வங்கி கணக்கு கே.ஒய்.சி. விவரங் களை அப்டேட் செய்ய சொல்லி வரும் செயலிகளை பதிவி றக்கம் செய்தால் உங்களது வங்கிக் கணக்கில் அனுமதி யில்லாமல் மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். எனவே வங்கி பெயரில் வரும் எந்தவிதமான செயலிகளை பதிவிறக் கம் செய்ய வேண்டாம் என்று காவல் துறையினர் அறிவுறித்தி யுள்ளனர்.
அவிநாசியில் ரூ.2 லட்சம் திருடிய 6 பேர் கும்பல்
அவிநாசி, டிச.24- அவிநாசியில் ஸ்கூட்டரில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை ஆறு பேர் கொண்ட கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்ப டுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். (55) கோவை மெயின் ரோட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தனது கணக் கில் இருந்து இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, அதில் பத்தாயிரம் ரூபாயை சட்டை பையில் வைத்துக் கொண்டு, மீதமிருந்த இரண்டு லட்சம் ரூபாயை வங்கி கிளை யின் முன்பு நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டர் சீட்டிற்கு அடியில் வைத்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த கடைக்குச் சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த போது தனது ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த சண்முகம் வங்கி கிளையின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, நடந்து வந்த அடையாளம் தெரி யாத இருவர் மற்றும் இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் ஸ்கூட்டர் சீட்டை உடைத்து பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து அவிநாசி காவல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இக்கும்பலை தேடி வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் செயல்படும் வங்கி கிளையின் முன்பு நடந்த கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிச.27விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
திருப்பூர், டிச. 24- மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வரும் டிச.27 விவ சாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப் பூர் மாவட்டத்தில் வரும் டிச. 27 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவ லக வளாக அறை எண் 240ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள் ளது. இதில் விவசாயிகள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களின் பிரநிதிகள் பங் கேற்கும் படி அறிவுறித்தி யுள்ளார்.
இணையவழியில் பட்டா வழங்க கோரிக்கை
இணையவழியில் பட்டா வழங்க கோரிக்கை தருமபுரி, டிச.24- இலளிகம் கிராமத்தில் ஒதுக்கீடு செய்த மனைகளுக்கு இணைய வழியில் பட்டா வழங்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெ.பிரதாபன் மற்றும் வீட்டுமனை பெற்ற பயனாளிகள் தரும புரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். அதில், நல்லம்பள்ளி வட்டம், இலளிகம் வருவாய் கிராமத் தில் வாழும் வீட்டுமனை இல்லாத விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வேண்டி, 1996 ஆம் ஆண்டு இலளிகம் வருவாய் கிராமத்தில் மிகவும் பிற்பட் டோர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 1998 ஆம் ஆண் டில் 82 பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து ஆணை கள் வழங்கப்பட்டன. இதில், இணைய வழி பட்டா 17 பய னாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இணைய வழியில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக் கப்பட்டுள்ளது.
48 சவரன் நகை கொள்ளைச் சம்பவம் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது
48 சவரன் நகை கொள்ளைச் சம்பவம் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது உதகை, டிச.24- கவுடாசோலை என்ற இடத்தில் வசித்துவரும் பழனிச் சாமி என்பவர் வீட்டில் இருந்து 48 சவரன் நகை கொள்ளை யடித்தது தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேரை உதகை காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகை கவுடாசோலை பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி கடந்த 19 ஆம் தேதியன்று மனை வியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 48 சவரன் தங்க நகை கள் மற்றும் 20000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நகை களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பழனிசாமி புதுமந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர் பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா, அறிவுறுத்தலின்படி உதகை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், புதுமந்து காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நித்யா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், பழனிச்சாமி வீட்டில் கடந்த 15 நாட்க ளுக்கு முன்பு தோட்ட வேலைக்காக வந்த சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்த அபய் போர்த்தி (19), ஈஸ்வர சிங் கார்டு (43), அனிதா பாய் (38), அங்கித் சிங் ஆகியோர் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் அனை வரையும் கைது செய்து திருடப்பட்ட நகைகள் அனைத்தை யும் கைப்பற்றினர்.
அணைகள் நிலவரம் (செவ்வாய்க்கிழமை)
மேட்டூர் அணை
நீர்மட்டம்:119/120அடி
நீர்வரத்து:2,701கனஅடி
நீர்திறப்பு:800கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:135.63/160அடி
நீர்வரத்து:13.39கனஅடி
நீர்திறப்பு:406.90கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:66.91/72அடி
நீர்வரத்து:605கனஅடி
நீர்திறப்பு:967கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:118/120அடி
நீர்வரத்து:373கனஅடி
நீர்திறப்பு:414கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:52.00/60அடி
நீர்வரத்து:904கனஅடி
நீர்திறப்பு:988கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்:89/90அடி
நீர்வரத்து:417கனஅடி
நீர்திறப்பு:80கனஅடி