districts

புதுப்பொழிவுடன் ஒகேனக்கல் சுற்றுலாத்தளம் விரைவில் திறப்பு

தருமபுரி, ஆக.7- ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட் டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ள தால், அதனை தமிழ்நாடு முதல்வர்  விரைவில் திறந்து வைக்கப்பட உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் பிரசித்தி சுற்று லாத் தளங்களில் தருமபுரி மாவட்டத்தி லுள்ள ஒகேனக்கல்லும் ஒன்று. தமிழ் நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ் தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். கோடைக்காலங் களிலும், விடுமுறை நாட்களிலும் ஆயி ரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் குவி வது வாடிக்கையாக உள்ளது. ஒகேனக் கல்லில் மெயினருவி, மணல்மேடு, கூட் டாறு, சினி பால்ஸ், நீர்வீழ்ச்சி, முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் கண்காட்சி,  தொங்கும் பாலம் மற்றும் ஆலம்பாடி பரி சல்துறை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்த்து செல்கின்ற னர். மெயினருவி மற்றும் சினிபால்சில் விரும்பி குளிக்கின்றனர். பரிசல் ஓட்டிகள், பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். தற் போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வா கத்தால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, ஒகேனக் கல் சுற்றுலாத் தளத்தை சர்வதேச தரத் திற்கு மேம்படுத்த வேண்டுமென சுற்று லாப் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை  ஏற்று தருமபுரி மாவட்ட நிர்வாகம், சுற் றுலாத்துறை இணைந்து ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தை மேம்படுத்த ரூ.18 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கியது. தற்போது, 99 சதவிகித மேம்பாட்டு பணிகள் முடிந்து, விரை வில் திறப்பு விழாவிற்கு தயார் நிலை யில் உள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறை அதி காரிகள் கூறுகையில், ஒகேனக்கல் சுற் றுலாத்தளத்தை மேம்படுத்தும் பணிகள் கடந்த ஒன்றரை வருடமாக நடந்து வருகி றது. பிலிகுண்டுலுவில் இருந்து ஒகே னக்கல் நோக்கி வரும் காவிரிநீர், ஐந்தரு வில் விழும் காட்சியை கண்டு ரசிக்க வாட்ச் டவர் அமைக்கப்படுகிறது. வாட்ச்  டவரில் நின்று சுற்றுலாப் பயணிகள் ஐந் தருவியை பார்க்கலாம். காவிரி கரையில் இருந்து மெயினருவி, சினிபால்ஸ்க்கு செல்லும் நீரை கரையில் நின்று கண்டு களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. பரிசல் துறை நவீன முறையில்  அழகுபடுத்தி மாற்றி அமைக்கப்பட் டுள்ளது. நவீன கழிப்பறை வசதி,  அனைத்து வசதிகளுடன் கூடிய மீன்  சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மசாஜ் செய்ய தனி இடம், பெண்கள் ஆடை மாற்ற பாதுகாப்புடன் கூடிய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. தற் போது 99 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிந்துள்ளது. விரைவில் தமிழக முதல் வர் காணொளி மூலம் திறந்து வைப்பார், என்றனர்.