districts

img

ஒகேனக்கல் குடிநீர் 2ஆம் கட்ட திட்டப்பணி ஜப்பான் குழுவினர் ஆய்வு

தருமபுரி, மார்ச் 12- தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல் கூட் டுக் குடிநீர் திட்டத்தின் 2ஆம் கட்ட திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து,  ஜப்பான் குழுவினர் கள ஆய்வு மேற் கொண்டனர்.   இதுகுறித்து தரும்புரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தருமபுரி மாவட்டத்திலுள்ள, தரும புரி நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும்  10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள  251 ஊராட்சிகளிலுள்ள 2020 ஊரகக்  குடியிருப்புகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூர் மாநக ராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூ ராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றி யங்கள் என 333  ஊராட்சிகளிலுள்ள 3074  ஊரக குடியிருப்புகளுக்கும், குடிநீர் அளவை உயர்த்தி வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கட்டம் செயல்படுத்தப்பட உள் ளது. இத்திட்டத்தின் மூலம் 2041-ஆம்  ஆண்டு (இடைநிலை) மக்கள் தொகை யான 37.60 லட்சம் நபர்களுக்கு நாள்  ஒன்றுக்கு 251.60 மில்லியன் லிட்டர்  குடிநீரும், அதன் பின்னர் 2056ஆம்  ஆண்டு (உச்சநிலை) மக்கள் தொகை யான 41.83 லட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 304.83 மில்லியன் லிட்டர் குடிநீ ரும் வழங்கும் வகையில் வடிவமைக் கப்பட உள்ளது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் திட்டத்திற்கான விரிவான  திட்ட மதிப்பீடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழில் நுட்ப குழுவின்  குறிப்புரைகளுக்கேற்ப, ரூ.7890 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கான ஆரம்பநிலை திட்ட முன்மொழிவு அறிக்கை, பன் னாட்டு நிதி உதவி பெறும் திட்டத் தின் கீழ் நிதியுதவி பெற இந்திய அரசின் இணையதளத்தில் முன்மொ ழிவு பதிவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப் பட்டு உள்ளது. மேலும் இத்திட்டத் திற்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் மாநில  அளவிலான திட்ட ஒப்புதல் குழு  கூட்டத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள் ளது.  இத்திட்ட மதிப்பீடு குறித்து JICA ன் (Jappan International Cooperation Agency) கள ஆய்வு செவ்வாயன்று நடைபெற்றது. இத்திட்டத்திற்கான நிதி  ஆதாரம் மற்றும் அரசின் நிர்வாக ஒப்புதல் பெற்ற பின் திட்டப் பணிகள்  செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள் ளப்படும். மேலும், ஒகேனக்கல்லில் தலைமை பணியிடம் கட்ட தேவையான அரசு நிலம் ஒதுக்கீடு செய்து அரசு  ஆணை பெறப்பட்டுள்ளது. அதே போன்று, பென்னாகரம் அருகே பருவ தனஅள்ளி கிராமத்தில், நீர் சுத்தி கரிப்பு நிலையத்திற்கான நிலம்  ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பெறப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் ஒகேனக்கல் குடிநீர்  வடிகால் வாரிய செயற்பொறியா ளர்கள் ரவிக்குமார், சங்கரன், பென்னா கரம் வட்டாட்சியர் சுகுமார், வட்டார வளரச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கணேஷ் உட்பட தொடர்புடைய அலு வலர்கள் கலந்துகொண்டனர்.