districts

img

பழங்குடியினரின் பணியை கண்டு வியந்த அதிகாரிகள்

திருப்பூர், செப்.20- நிதி விழிப்புணர்வு முகா மில் கலந்து கொண்ட பழங் குடியின மக்கள், மாலை  கோர்க்கும் பணியில் ஈடுபட் டிருந்தது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் வியா ழனன்று பழங்குடியின மக்க ளுக்கு நிதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மக்க ளுக்கு தேசியப் பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மற்றும் தாட்கோத்துறை இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் நரிக்குறவர் பழங் குடியின மக்களுக்கு மானியத்துடன் பருவக் கடன் உதவி வழங்கிய பொருளாதார முன் னேற்றம் அடையும் வகையிலான நிதி விழிப் புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில், தேசிய பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழக முதன்மை மேலாளர் பிஷ் மிதா தாஸ், தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித் குமார் மற்றும் அம்மாபட்டி கிராமம்,  அறிவொளி நகர், ஒளிவிளக்கு நகர் ஆகிய  பகுதிகளில் வசிக்கின்ற 195 நரிக்குறவர் மக் கள் பங்கேற்றனர். அப்போது, அதிகாரிகளின் ஆலோசனை களை கேட்டவாறு நரிக்குறவர், பழங்குடி யின மக்கள் தொடர்ந்து மாலை கோர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் பணியை பார்த்து வியந்த தேசிய பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் வளர்ச்சிக்கழக முதன்மை மேலாளர் பிஷ்மிதா தாஸ் தனது  செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.