கோபி, நவ.24- குடியிருப்புகளில் மழைநீர் புகாமல் இருக்க கூகலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட தாழை கொம்புதூரில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்தனர். இதனைத்தொடர்ந்து, அரசு பேருந்தை சாலைசிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து வந்த பேரூராட்சி அதிகாரிகள், காவல் துறை, வரு வாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நி லையில், தாழைகொம்புதூர் பகுதியில், கூகலூர் - மேவானி சாலையில் தேங்கும் மழைநீரை குழாய்கள் மூலம் வடி காலுக்கு கொண்டு செல்லும், பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை கூகலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கதிர்வேல், பேரூராட்சி தலைவர் ஜெயலட்சுமி ஆகி யோர் பார்வையிட்டனர்.