கோவை, ஜூலை 4- கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் வழித்தடங்களை அதிகாரிகள் வியாழனன்று ஆய்வு செய்தனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவை மாவட் டத்தில் மெட்ரோ ரயில் 2 ஆம் திட்ட சேவை வரவுள்ளது. இது குறித்து தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு அறி வித்தது. அதன்படி, கோவை மாவட் டத்தில், அவிநாசி சாலை மற்றும் சக்தி சாலை ஆகிய இரண்டு முக் கிய வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அவிநாசி சாலையில் ஆட் சியர் அலுவலகம், லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, பீளமேடு, கோவை மருத்துவக் கல்லூரி, சித்ரா வழி யாக நீலாம்பூர் வரை 20.4 கிமீ தூரத்திற்கு 17 ரயில் நிலையங் களை கொண்டும், சக்தி சாலையில் காந்திபுரம் பகுதியில் துவங்கி கண பதி, ராமகிருஷ்ணா மில்ஸ், விநா யகபுரம், சரவணம்பட்டி, விஸ்வாச புரம் வழியாக வளையம் பாளை யம் வரை 14.4 கிமீ தூரத்திற்கு 14 ரயில் நிலையங்களைக் கொண்டும் அமைய இருப்பதாக கடந்தாண்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
மேலும், இந்த ரயில் வழித்தடங்கள் அனைத்தும் உயர் மட்ட வழித்தடங்களில் அமைய உள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தி ருந்தனர். இந்நிலையில், இந்தத் திட்டத் தின் இயக்குனர் அர்ஜுனன், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி யின் மூத்த போக்குவரத்து நிபுணர் வெங்கியூ, சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொதுச் செயலாளர் ரேகா அடங்கிய குழுவி னர் கோவை மாவட்டம், உக்கடம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் கால முறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உக்கடம் பேருந்து நிலையத்தின் அமைப்பு அங்கு உள்ள மேம்பாலத்தின் அமைப்பு கள் ஆகியவற்றை பார்வையிட்ட மெட்ரோ வழித்தட வரைபடங்களை கொண்டு ஆய்வு செய்தனர்.