உடுமலை, நவ.28- உடுமலை அரசு போக்குவரத்து பணிமனையில் பழுதான பேருந்துகளை சரி செய்ய போதிய உதிரி பாகங்களை வழங் காத உடுமலை பணிமனை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்த சிஐடியு முடிவு செய்துள்ளது. இது குறித்து சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க உடுமலை கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, உடுமலை போக்குவரத்து கிளையில் பேருந்து பராமரிப்புப் பணிகள் செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி தர வேண்டிய பணப்பலன்கள் தருவது இல்லை. இந்த போக்கு வரத்து கிளையில் பல பேருந்துகள் ஓட முடியாத நிலையில் உள்ளன. தற்பொழுது ஓடிக்கொண்டு இருக்கும் டாடா பேருந் துகளில் லைலேண்ட் இன்ஜின்களை பொருத்தும் நிலை உள் ளது. பேருந்துகளின் முக்கிய பாகமான இன்ஜின்களை மாற்றி ஓடும் பேருந்துகளை இயக்குவதற்கு கடினமாக இருக்கும். இதனால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. உடுமலை பணி மனையில் போதிய உதிரி பாகம் இல்லை. பேருந்துகளை பழுது நீக்க போதிய ஆட்கள் இல்லாத நிலை உள்ளது குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக் கப்படவில்லை. பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் போது, பேருந்துகள் வழியில் நின்று விட்டால் உடனடியாக டெக்னிக்கல் தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் தண்டனை வழங்குவது வாடிக்கையாக உள்ளது. உடுமலை போக்குவரத்து பணிமனை அதிகாரிகளின் இந்த போக்கை கண்டித்து சிஐடியு போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளது என தொரிவித்துள் ளனர்.