கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பெருந்துயர சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட்டம், பந்தலூரில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வாலிபர் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், அசைன், பெரியார் மணிகண்டன், சிபிஎம் ஏரியா செயலாளர் ரமேஷ் உட்பட பலர், கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டு கலந்து கொண்டனர்.