districts

img

பட்டியலின மக்களின் நில அபகரிப்புக்கு துணைபோன அதிகாரிகள்

காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் சேலம், ஜூலை 6- பட்டியலின மக்களின் நில அபகரிப் புக்கு துணைபோன அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி சேலம் மாநகர உதவி காவல்  ஆணையர் அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கட்சியினர் புகாரளித்தனர். சேலம் மாநகராட்சி, 36 ஆவது வார் டுக்குட்பட்ட தாதம்பட்டி கிராமத்தில் பட் டியலின மக்களுக்கு சொந்தமாக 16.5  ஏக்கர் நிலம் உள்ளது. இதனை அரசு அதி காரிகள் நில தரகர்களுக்கு ஆதரவாக வும், விதிகளுக்கு அப்பாற்பட்டும் பத்தி ரப்பதிவு செய்துள்ளனர். அதாவது, 16.5  ஏக்கர் மீதான பத்திரப்பதிவுக்கு தடங் கள் மனுவை மீறி, புல எண்:64 மற்றும் 66க்கு மட்டும் பத்திரப்பதிவு தடையை அரசு அதிகாரிகள் நீக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலகட்ட  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். எனவே, நீதிமன்ற உத்தரவை அலட் சியப்படுத்தி பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் அனைவர் மீதும் வன்கொடுமை தடுப் புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி, வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் சேலம் மாநகர உதவி காவல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.  இந்நிகழ்சில், சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்ட னர்.