districts

ஊராட்சி ஒன்றிய கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள்? சிபிஎம் கவுன்சிலர் குற்றச்சாட்டு

அவிநாசி, ஆக.7- அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் எழுப்புகின்ற கேள்விகளுக்கு  பதிலளிக்க மறுத்து, துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்க ணிக்கும் செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடை பெற்றது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பாளையம் ஒன்றியக் கவுன்சிலர் முத்துச்சாமி பங் கேற்று பேசுகையில், இதுவரை ஊராட்சி ஒன்றிய கூட் டங்கள் மூன்றுக்கு மேல் நடைபெற்றுள்ளது. அப்போது, இங்கு எழுப்புகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகை யில் துறைசார்ந்த அதிகாரிகள் யாரும் பங்கேற்பதில்லை.

பெருந்தலைவர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உள்ளிட் டோர் மட்டுமே பதில் அளித்து வருகின்றனர். ஆகவே, அதி காரிகள் பங்கேற்கும் வரை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரினார்.  மேலும், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம் பாளையம் பகுதியில் ஆற்று குடிநீர் முறையாக விநியோ கிப்பதில்லை.

மங்கலம் ஊராட்சியில் இருந்து புதுப்பா ளையம் ஊராட்சி பகுதிகளில் கோழிக் கழிவுகள் கொட்டப் படுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரன் கோரிக்கைகள் விரைவில் நிறை வேற்றப்படும் என தெரிவித்தார்.